பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
01:02
புதுடில்லி:மொபைல் எண் மாறாமல், சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட 8 மாதங்களில், 1.10 கோடி பேர் தங்களது சேவை நிறுவனங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.சென்ற ஏப்ரல் மாதத்தில், 85 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை, ஜூன் இரண்டாவது வாரத்தில், 1.10 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், ஏராளமானோர் சி.டி.எம்.ஏ தொழில்நுட்பத்திலிருந்து, ஜி.எஸ்.எம் தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சி.டி.எம்.ஏ தொழில்நுட்பத்தில் தொலைபேசி சேவையினை வழங்கி வரும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாட்டா டெலிசர்வீசஸ் ஆகிய நிறுவனங்களிலிருந்து,சேவையினை மாற்றிக் கொள்ள அதிகளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, ரிலையன்ஸ் சி.டி.எம்.ஏ வாடிக்கையாளர்கள் 6 லட்சம் பேரும், ரிலையன்ஸ் ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்கள் 4.5 லட்சம் பேரும், தங்களது சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|