பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
10:55
டெட்ராய்ட் : ஹைபிரிட் மற்றும் பிளக் இன் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை 2013ம் ஆண்டிற்குள் 3 மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த ஃபோர்டு நிறுவன குளோபல் மார்க்கெட்டிங் பிரிவின் துணை தலைவர் ஜிம் ஃபேர்லி கூறியதாவது, எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களின் உற்பத்தியை மூன்று மடங்கு வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், ஐரோப்பாவில் தற்போது விற்பனையில் சக்கைப்போடு போட்டு வரும் சி-மாக்ஸ் மினிவேனை வடஅமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். 2012ம் ஆண்டிற்குள், வடஅமெரிக்காவில், எலெக்டரிக் வாகன்ஙகளை உற்பத்தி செய்யும் யூனிட்களை அமைக்க உள்ளோம். தங்கள் நிறுவனம், சர்வதேச அளவில், ஆண்டிற்கு 35 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருவதாகவும், 2013ம் ஆண்டிற்குள் இதன் விற்பனையை ஆண்டிற்கு 1 லட்சம் என்ற அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|