விண்டோஸ் ஸ்மார்ட்போனை  இந்தாண்டு இறுதிக்குள்  அறிமுகப்படுத்துகிறது நோக்கியாவிண்டோஸ் ஸ்மார்ட்போனை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்துகிறது ... ... பவர் பைனான்ஸ் கார்ப்., நிகர லாபம் ரூ.2,647 கோடி பவர் பைனான்ஸ் கார்ப்., நிகர லாபம் ரூ.2,647 கோடி ...
இரட்டை வரி தடுப்பு ஒப்பந்தம்மொரீஷியசிடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2011
01:00

புதுடில்லி:இரட்டை வரி தடுப்பு ஒப்பந்தத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து, மொரீஷியஸ் அரசிடன், மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியா - மொரீஷியஸ் இடையே இரட்டை வரி தடுப்பு ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதன்படி, மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு, மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், அளவற்ற கறுப்பு பண புழக்கத்திற்கும் வழி வகுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான அன்னிய நிதி நிறுவனங்கள், வரி செலுத்துவதை தவிர்க்க, மொரீஷியஸ் வாயிலாக, இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடும் மேற்கொண்டு வருகின்றன. இது தவிர, அன்னிய நேரடி முதலீடு மொரீஷியஸ் வாயிலாக நம் நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்தியர்கள், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம், மொரீஷியஸ் வாயிலாக, இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டு, அங்கீகாரமிக்க வருவாயாக உருமாறுகிறது. பயங்கரவாதிகள் இதே வழிமுறையை பின்பற்றி, பங்குச் சந்தைகள், பரஸ்பர நிதியகங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதனால், உள்நாட்டு பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப் பெரிய அச்சிறுத்தலாக, இரட்டை வரி தடுப்பு ஒப்பந்தம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், மொரீஷியஸ் வாயிலாக மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, மூலதன ஆதாய வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், கறுப்பு பணத்தை ஒழிக்கவும், ஊழலை அகற்றவும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால், மொரீஷியஸ் அரசிடன், மத்திய அரசி மீண்டும் பேச்சிவார்த்தை நடத்துவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில், 10 ஆண்டுகளில், 8,100 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 43 சதவீதம், அதாவது 3,500 கோடி டாலர் மொரீஷியஸ் நாட்டிலிருந்து வந்துள்ளது. மூலதன ஆதாய வரியை அமல்படுத்தும் பட்சத்தில், மொரீஷியசிலிருந்து வரும் அன்னிய நேரடி முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)