பதிவு செய்த நாள்
22 ஜூன்2011
16:00
மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று பங்குவர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 9.67 புள்ளிகள் குறைந்து 17550.63 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 2.45 புள்ளிகள் அதிகரித்து 5278.30 என்ற அளவிலும் இருந்தது. ஓஎன்ஜிசி, இன்போசிஸ், பெல், லார்சன் அண்ட் டூப்ரோ, சன்பார்மா, பெல், டாடாபவர், ஐடிசி, சிப்லா, விப்ரோ, ஸ்டெர்லைட், கிராஸிம், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், பார்தி ஏர்டெல், டிசிஎஸ், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஜேஎஸ்பிஎல், செயில், மாருதி, ஹிண்டால்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி பேங்க், ஹீரோ ஹோண்டா உள்ளி்ட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|