பதிவு செய்த நாள்
22 ஜூன்2011
16:42
புதுடில்லி : ஏப்ரல் மாதத்தில், நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 43 சதவீதம் அதிகரித்து 3.12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 3 மாதங்களாக, தொடர் சரிவில் இருந்த அந்நிய நேரடி முதலீடு, ஏப்ரல் மாதத்தில் ஏற்றம் பெற்றிருந்நது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 2.17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்ததாகவும், இந்த ஆண்டில் இது 43 சதவீதம் அதிகரித்து 3.12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில், வீழ்ச்சியில் இருந்த ஐரோப்பிய பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது இதற்கு காரணம் என தெரிவிக்கப்ப்டடுள்ளது. மொரீஷியஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும் நாடுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகளில் சிங்கப்பூர் முதல் இடத்திலும் ( 1.17 பில்லியன் அமெரிக்க டாலர்கள்), இதனைத் தொடர்ந்து மொரீஷியஸ் (976 மில்லியன் அமெரிக்க டாலர்கள்), ஜப்பதன் (235 மில்லியன் அமெரிக்க டாலர்கள்), பிரான்ஸ் (220 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் சைப்ரஸ் ( 170 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்ற வரிசையில் உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|