பதிவு செய்த நாள்
22 ஜூன்2011
23:55
பெங்களூரு: இந்தியாவில், தொலை தொடர்பு(டெலிகாம்)சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் விற்றுமுதல், சென்ற 2010-11ம் நிதியாண்டில் 2.52 சதவீதம் குறைந்து, ஒரு லட்சத்து 17ஆயிரத்து 39 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 20ஆயிரத்து 69 கோடி ரூபாயாக இருந்தது.தொலை தொடர்பு பகிர்மான சாதனங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் இதர சாதன உற்பத்தியாளர்களைக் கொண்ட 500 நிறுவனங்களின் வர்த்தகம் குறித்து 'வாய்ஸ் அண்டு டேட்டா' இதழ் ஆய்வு மேற்கொண்டது.இதில், சென்ற 2010-11ம் நிதியாண்டில், தொலை தொடர்பு பகிர்மான சாதனங்கள் பிரிவின் விற்றுமுதல் 12.12 சதவீதம் குறைந்து, 58 ஆயிரத்து 294 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய 2009-10ம் நிதியாண்டில், இது 66 ஆயிரத்து 332 கோடி ரூபாயாக இருந்தது.அதே சமயம், நிறுவனங்களுக்கான தொலை தொடர்பு சாதனங்களைத் தயாரிப்போரின் விற்றுமுதல் 0.87 சதவீதம் அதிகரித்து, 23ஆயிரத்து 815 கோடி ரூபாயில் இருந்து, 24ஆயிரத்து 23 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|