பதிவு செய்த நாள்
22 ஜூன்2011
23:55
சிங்கப்பூர்: நோக்கியா நிறுவனம், 'என்-9' என்ற அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.சிங்கப்பூரில் நடைபெற்ற தொலைத்தொடர்பு துறை மாநாட்டில், நோக்கியா நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் இலாப் புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தி பேசியதாவது:நிறுவனம் புதிய கொள்கையின் அடிப்படையில் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. 'என்-9' மொபைல் போன், நோக்கியாவின் 'மீகோ' ஆணை தொகுப்பில் வெளிவர உள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஆணை தொகுப்புடன் நோக்கியா மொபைல் போன்கள் வெளியாகும். இதை தொடர்ந்து, மொபைல் போன் சந்தையில் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும்.இவ்வாறு ஸ்டீபன் இலாப் தெரிவித்தார்.ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் கடும் போட்டியால், சர்வதேச மொபைல் சந்தையில், நோக்கியா நிறுவனத்தின் பங்களிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|