நோக்கியாவின் புதிய 'என் - 9' மொபைல்போன்நோக்கியாவின் புதிய 'என் - 9' மொபைல்போன் ... பருப்பு உற்பத்தியை உயர்த்த மத்திய அரசு ரூ.110 கோடி நிதி பருப்பு உற்பத்தியை உயர்த்த மத்திய அரசு ரூ.110 கோடி நிதி ...
நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2011
23:56

மும்பை: நாட்டில், புதிய அனல் மின் திட்டங்கள் பெருகி வருவதால், நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், மத்திய மின்தொகுப்பிற்கு, ஒப்பந்தப்படி மின்சார வினியோகம் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், நிலக்கரி வழங்க மத்திய அர” முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பெருகி வரும் தொழில்வளம் காரணமாக மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, பல்வேறு புதிய மின்திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, நிலக்கரியை எரி பொருளாக பயன்படுத்தும் அனல் மின் உற்பத்தி திட்டங்களாகும். இதனால் நிலக்கரியின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், தேவைக்கேற்ப நிலக்கரி உற்பத்தி இல்லை என ஆய்வு நிறுவனமான பிட்ச் தெரிவித்துள்ளது.சென்ற ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி, நாட்டின் மொத்த மின்உற்பத்தி திறனில், நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி திறனின் பங்களிப்பு 54 சதவீதமாக உள்ளது. சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டில் உற்பத்தியான மொத்த மின்சாரத்தில், அனல் மின் நிலையங்களின் பங்களிப்பு 66 சதவீதமாக உள்ளது. அனல் மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் பல நிறுவனங்களின், நிலக்கரி தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு, நிலக்கரி ”ரங்க உரிமையை மத்திய அர” வழங்குகிறது. ஆனால், சுற்றுச்சூழல் விவகாரம், உள்ளுர் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால், இந்த ”ரங்கங்களில் இருந்து நிலக்கரி எடுக்கும் பணி சுணக்கமடைந்துள்ளது. இதுவும் நிலக்கரி பற்றாக்குறைக்கு காரணம் என பிட்ச் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் நிலக்கரி பற்றாக்குறை 14.20 கோடி டன்னாக இருக்கும் என்று மத்திய உருக்குத் துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.இத்தகைய போக்கால், குறுகிய மற்றும் நடுத்தர காலத்திற்கு நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு மின்உற்பத்தி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, பொதுத்துறையை சேர்ந்த என்.டி.பி.சி, தாமோதர் வேலி கார்ப்பரேஷன் உள்ளிட்ட மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மற்றும் மின்வினியோகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் நிலக்கரி வழங்க மத்திய அர” முடிவு செய்துள்ளது. இதனால், இந்நிறுவனங்களின் மின்உற்பத்தி தடைபடாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில்,கோல் இந்தியா நிறுவனம் 80 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. சொந்தமாக நிலக்கரி ”சுரங்கங்களைக் கொண்டுள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள், உருக்கு நிறுவனங்கள் ஆகியவை எஞ்சிய பங்களிப்பை கொண்டுள்ளன.கடந்த 2007-2011ம் ஆண்டுகளில்,கோல் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு வகை நிலக்கரியின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 3.7 சதவீதம் என்ற அளவிற்கு இருந்தது. அதே சமயம், இதே காலத்தில், நாட்டின் நிலக்கரி அடிப்படையிலான ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன் 7.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கோல் இந்தியா நிறுவனம், சென்ற 2010-11ம் நிதியாண்டில் 43.10 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் முட்டுக்கட்டையாக உள்ளதால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, 45.20 கோடி டன் என்ற அளவிற்கே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்திய அனல் மின் நிறுவனங்களுக்கு, நிலக்கரி பற்றாக்குறை மிகப் பெரிய இடர்பாடாக உள்ளது. இந்நிறுவனங்கள், கோல் இந்தியாவை விட, இறக்குமதியாகும் நிலக்கரிக்கு கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது. மேலும், துறைமுகங்களுக்கும், மின்நிலையங்களுக்கும் இடையே நிலக்கரி போக்குவரத்தை சுலபமாக மேற்கொள்ள போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் மின் உற்பத்தி பாதிப்பிற்கு காரணமாக உள்ளது.இது தவிர, சில அனல் மின் நிலையங்களில் உள்ள கொதிகலன்கள், குறிப்பிட்ட தரமுள்ள நிலக்கரியை மட்டுமே ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால், பல அனல் மின்உற்பத்தி நிலையங்கள், இறக்குமதியாகும் நிலக்கரியில் 30 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நிலக்கரி அதிகம் உற்பத்தியாகிறது. இவை, இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் பெருகி வரும் நிலக்கரி தேவையை கருத்தில் கொண்டு, நிலக்கரி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அல்லது நிலக்கரி விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)