பதிவு செய்த நாள்
22 ஜூன்2011
23:56
புதுடில்லி: மத்திய அரசு, நாட்டின் பருப்பு வகைகள் உற்பத்தியை, அதிகரிக்க, விவசாயிகளுக்கு, மாநில அரசுகளின் வாயிலாக 110 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.நாட்டின் பல மாநிலங்களில், மழை காலம் தொடங்கியதை அடுத்து, பருப்பு வகைகள் சாகுபடிக்காக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 60 ஆயிரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர்.மத்திய அரசு, நாட்டின் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 'ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா' என்ற திட்டத்தை கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்தது. நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், வேளாண் உற்பத்தியை ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற அளவில் உயர்த்தும் வகையில், இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. வேளாண் வித்துகள், வாங்குவது, கடன் மற்றும் மானியம் என்ற வகையில், இத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.மேற்கண்ட 110 கோடி ரூபாயில், மகாராஷ்டிராவிற்கு, 25.48 கோடி ரூபாயும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு, 21.61 கோடி ரூபாயும், உத்தரபிரதேசத்திற்கு, 19.18 கோடி ரூபாயும், கர்நாடகாவிற்கு, 15.43 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகை, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட இதர மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|