பருப்பு உற்பத்தியை உயர்த்த மத்திய அரசு ரூ.110 கோடி நிதிபருப்பு உற்பத்தியை உயர்த்த மத்திய அரசு ரூ.110 கோடி நிதி ... இந்திய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு 59 சதவீதம் வளர்ச்சி இந்திய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு 59 சதவீதம் வளர்ச்சி ...
பொறியியல் துறை ஏற்றுமதி ரூ.36,340 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2011
23:57

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்ற மே மாதம், பொறியியல் துறையின் ஏற்றுமதி, 119 சதவீதம் அதிகரித்து 790 கோடி டாலராக (36ஆயிரத்து 340 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், இது,360 கோடி டாலராக (16ஆயிரத்து 560 கோடி ரூபாய்)இருந்தது.இந்தியாவில் தயாரிக்கப்படும் பொறியியல் பொருள்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது.மேலும், லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்பை வழங்கி வருகின்றன. இதனால், நாட்டின் பொறியியல் துறை ஏற்றுமதி, குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது, என்று தெரிவித்தார்.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்ற ஏப்ரல் - மே மாதங்களில் பொறியியல் துறை ஏற்றுமதி 115 சதவீதம் அதிகரித்து, 1,450 கோடி டாலராக (66ஆயிரத்து 700 கோடி ரூபாய்)உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், பொறியியல் துறை ஏற்றுமதி இலக்கு, 7,200 கோடி டாலராக (3 லட்சத்து 31ஆயிரத்து 200 கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் மட்டுமின்றி, வளரும் நாடுகளும் அதிக அளவில் பொறியியல் பொருள்களை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் சென்ற நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவிற்கு, நாட்டின் பொறியியல் துறை ஏற்றுமதி 85 சதவீதம் அதிகரித்து, 6,010 கோடி டாலராக(2 லட்சத்து 76ஆயிரத்து 460 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதியை 50,000 கோடி டாலராக(23 லட்சம் கோடி ரூபாய்) உயர்த்த மத்திய அர” திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, பொறியியல் துறை, முக்கிய பங்கு வகிக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.பொறியியல் துறை ஏற்றுமதியில், போக்குவரத்து சாதனங்கள், பொறியியல் இயந்திரங்கள், வார்படங்கள், நட்டு, போல்ட் உள்ளிட்ட உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)