பதிவு செய்த நாள்
22 ஜூன்2011
23:57
புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்ற மே மாதம், பொறியியல் துறையின் ஏற்றுமதி, 119 சதவீதம் அதிகரித்து 790 கோடி டாலராக (36ஆயிரத்து 340 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், இது,360 கோடி டாலராக (16ஆயிரத்து 560 கோடி ரூபாய்)இருந்தது.இந்தியாவில் தயாரிக்கப்படும் பொறியியல் பொருள்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது.மேலும், லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்பை வழங்கி வருகின்றன. இதனால், நாட்டின் பொறியியல் துறை ஏற்றுமதி, குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது, என்று தெரிவித்தார்.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்ற ஏப்ரல் - மே மாதங்களில் பொறியியல் துறை ஏற்றுமதி 115 சதவீதம் அதிகரித்து, 1,450 கோடி டாலராக (66ஆயிரத்து 700 கோடி ரூபாய்)உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், பொறியியல் துறை ஏற்றுமதி இலக்கு, 7,200 கோடி டாலராக (3 லட்சத்து 31ஆயிரத்து 200 கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் மட்டுமின்றி, வளரும் நாடுகளும் அதிக அளவில் பொறியியல் பொருள்களை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் சென்ற நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவிற்கு, நாட்டின் பொறியியல் துறை ஏற்றுமதி 85 சதவீதம் அதிகரித்து, 6,010 கோடி டாலராக(2 லட்சத்து 76ஆயிரத்து 460 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதியை 50,000 கோடி டாலராக(23 லட்சம் கோடி ரூபாய்) உயர்த்த மத்திய அர” திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, பொறியியல் துறை, முக்கிய பங்கு வகிக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.பொறியியல் துறை ஏற்றுமதியில், போக்குவரத்து சாதனங்கள், பொறியியல் இயந்திரங்கள், வார்படங்கள், நட்டு, போல்ட் உள்ளிட்ட உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|