இந்திய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு 59 சதவீதம் வளர்ச்சிஇந்திய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு 59 சதவீதம் வளர்ச்சி ... 'சென்செக்ஸ்' 10 புள்ளிகள் சரிவு 'சென்செக்ஸ்' 10 புள்ளிகள் சரிவு ...
இந்தியாவில் ஜனவரி-மே வரையிலான காலத்தில்வெளிநாட்டு ”ற்றுலா பயணிகள் வருகை 12 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2011
23:58

மும்பை: நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், நம் நாட்டிற்கு வந்த ”ற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 11.5 சதவீதம் அதிகரித்து 25.23 லட்சமாக உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு ”ற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து காணப்பட்டது. இந்த நிலை தற்போது மாறியுள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் மீண்டு வருகின்றன. இதனால், இந்நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் ”ற்றுலா பயணிகள் எண்ணிக்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. சென்ற 2010ம் ஆணடு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், நம் நாட்டிற்கு வந்த வெளிநாட்டு ”ற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 22.63 லட்சமாக இருந்தது. இது, நடப்பு ஆண்டு இதே காலத்தில் 25.23 லட்சமாக உயர்ந்துள்ளது. சென்ற மே மாதம், இந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 3.69 லட்சமாக இருந்தது. இது, சென்ற ஆண்டு 3.45 லட்சம் என்ற அளவில் இருந்தது. ஆக,சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு மே மாதத்தில், அயல்நாட்டு ”ற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.எனினும், சென்ற 2010ம் ஆண்டு மே மாதம், நம்நாட்டிற்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, முந்தைய 2009ம் ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய ”ற்றுலா பயணிகளின் விருப்பத் தேர்வாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ”விட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. குறுகிய கால பயணத்திற்கு, துபாய், மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுளை பயணிகள் தேர்வு செய்கின்றனர். அண்மைக்காலத்தில் மகாவுக்கு அதிக அளவில் ”ற்றுலா பயணிகள் சென்று வருவதாக விமான பயண முகவர் ஒருவர் தெரிவித்தார்.இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போன்று, நம் நாட்டில் இருந்து அயல்நாடு செல்வோரின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. கடந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து 1.25 கோடி பேர் வெளிநாடு சென்றுள்ளனர். நடப்பாண்டில், இந்த எண்ணிக்கை 25-30 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, உள்நாட்டிற்குள் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் 45 கோடி பேர் விமான சேவையை பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கோவா, வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பிரதேசங்கள் ஆகியவை ”ற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கக் கூடியவையாக உள்ளன.இந்தியர்களின் செலவிடும் வருவாய் அதிகரித்து வருவதால், ”ற்றுலாவிற்காக தாராளமாக செலவிடுகின்றனர். மேலும், விடுமுறைக் காலத்தை, மனஇறுக்கத்தை போக்கிக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக கருதி, ”ற்றுலா தலங்களுக்கு செல்வதும் அதிகரித்து வருகிறது. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருவதாக இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)