பதிவு செய்த நாள்
23 ஜூன்2011
12:18
மதுரை: ''மதுரை பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் இணைப்புகளில் '4 ஜி' அலைக்கற்றைகள் பயன்படுத்துவதற்கு 'ஒய் மேக்ஸ்' தொழில் நுட்பம் விரைவில் ஏற்படுத்தப்படும்'', என பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் ராஜம் தெரிவித்தார். தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: பி.எஸ்.என்.எல்., சேவை மலைப்பகுதி உட்பட அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது. கிராமப்புற மாணவர்களுக்காக 5 ரூபாய் கட்டணத்தில் இன்டர்நெட் பிரவுசிங் செய்யும் வசதி திண்டுக்கல் மாவட்டத்தில் 21 இடங்களிலும், மதுரையில் (13), தேனியில் (4) ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 47 இடங்களில் இது போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். எல்லை பாதுகாப்பு படை, விமானப்படை, ராணுவம் போன்ற படைப்பிரிவுகளில் பணிபுரியும் வீரர்களுக்கு பி.எஸ்.என்.எல்., இணைப்புகளில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தினமும் 20 நிமிடம் இலவசமாக பேசும் வசதி முதன்முதலாக மதுரை மண்டலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பங்கள் தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் இணைப்புகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. '4 ஜி' அலைக்கற்றையின் வேகத்திற்கு இணையாக அதில் 'ஒய் மேக்ஸ்' தொழில் நுட்பம் மதுரையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். கடந்த இரு மாதங்களில் 1,200 பிராட்பேன்ட் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|