பதிவு செய்த நாள்
23 ஜூன்2011
16:00
மும்பை : வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று சரிவில் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 176.86 புள்ளிகள் அதிகரித்து 17727.49 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 41.70 புள்ளிகள் அதிகரித்து 5320 என்ற அளவிலும் இருந்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ஐடிசி, ரிலையன்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஓஎன்ஜிசி, இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், சிப்லா, மாருதி சுசூகி, ஹிண்டால்கோ, பெல், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது. இந்நிலையில், இரண்டரை மாதகால அளவில் இல்லாத அளவிற்கு உணவுப் பணவீக்கம் (9.13%) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|