ஏற்றத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... மக்காச்சோளம் இறக்குமதி அதிகரிக்கும் மக்காச்சோளம் இறக்குமதி அதிகரிக்கும் ...
மே மாதத்தில் ஜொலிப்பின் உச்சத்தில் நகைகள் ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2011
16:45

புதுடில்லி : நாட்டின் ரத்தினக்கல் மற்றும் ஆபரண நகைகளின் ஏற்றுமதி மே மாதத்தில் ஏற்றம் பெற்றுள்ளதாக ஜெம்ஸ் அண்ட் ஜீவல்லரி எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஜெம்ஸ் அண்ட் ஜீவல்லரி எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2010-11ம் நிதியாண்டின் மே மாதத்தில், 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு ரத்தினக்கல் மற்றும் ஆபரண நகைகளின் ஏற்றுமதி இருந்ததாகவும், இந்த நிதியாண்டின் மே மாதத்தில், இது 33.5 சதவீதம் அதிகரித்து 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது. வருங்காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜெம்ஸ் அண்ட் ஜீவல்லரி எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சில் தலைவர் ராஜீவ் ஜெயின் கூறியதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரத்தினக்கல் மற்றும் ஆபரண நகைகளுக்கு சர்வதேச சந்தையில் பெரும் வர‌வேற்பு உள்ளது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, இந்திய தயாரிப்புகளுக்கு ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் மிகுந்த வ‌ரவேற்பு உள்ளது. இதன்காரணமாக, கடந்த நிதியாண்டைக்‌ காட்டிலும், இந்த நிதியாண்டில் 10 முதல் 15 சதவீதம் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய தயாரிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு நாடுகள் ( 30 சதவீதம்) முதலிடத்திலும், அமெரிக்கா (25 சதவீதம்) இரண்டாம் இடத்திலும் மற்றும் ஐரோப்பா ( 20 சதவீதம்) மூன்றாம் இடத்திலும் உள்ளது. கடந்த நிதியாண்டின் மே மாதத்துடன் ஒப்பிடும் போது, தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்களின் ஏற்றுமதி 77 சதவீதமும், வெள்ளி நகைகள் 56 சதவீதமும், தங்க நகைகள் 26.5 சதவீதமும் மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைர நகைகளின் ஏற்றுமதி 23.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களிலேயே, ‌ரத்தினக்கல் மற்றும் ஆபரண நகைகளின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதேகாலக‌ட்டத்தை ஒப்பிடுகையில் 18.2 சதவீதம் அதிகரித்து 6.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் பதிவாகி இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். மற்ற சர்வதேச நாடுகளிலும், இந்திய தயாரிப்பு நகைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதையடுத்து, விரைவில் ரஷ்யா, லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரைவில் ஏற்றுமதியை துவக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)