பதிவு செய்த நாள்
28 ஜூன்2011
11:19
புதுடில்லி : அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேசனில், மே மாதத்தில் புதிதாக 2.5 மில்லியன் பேர் புதிதாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ரிலையன்ஸ் கம்யூனிகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ சேவையில், முனன்ணி நிறுவனமாக உள்ள தங்கள் நிறுவனத்தில் புதிதாக 2.5 மில்லியன் பேர் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது ஏனெனில், தொலைதொடர்பு நிறுவனங்களிடையே, அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இணைந்திருப்பது தங்களுக்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் சேவையில் இந்தியாவை அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி சர்வதேச அளவில் இரண்டாமிடம் வகிக்கிறது. முதலிடத்தில் சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது. டிராய் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையின்படி, நாட்டின் தொலைதொடர்பு சேவை உபயோகிப்பாளர்கள், இந்தாண்டு மார்ச் மாத இறுதியில் 846.32 மில்லியன் என்ற அளவில் இருந்ததாகவும், இது ஏப்ரல் மாதத்தில் 861.48 மில்லியன் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|