தங்கம் பவுனுக்கு ரூ. 40 குறைவுதங்கம் பவுனுக்கு ரூ. 40 குறைவு ... இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது ஹூவாவே இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது ஹூவாவே ...
விண்டோஸ் ஸ்மார்ட்போனை இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்துகிறது நோக்கியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2011
12:26

சிங்கப்பூர் : மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தொழில்நு‌ட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிங்கப்பூரில் தொலைபேசி மூலமாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நோக்கியா நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டீபன் எலாப் கூறியதாவது, தங்கள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன், விண்டோஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், 2012ம் ஆண்டுவாக்கில் அதிகளவிலான இந்த போன்களை வர்த்தகப்படுத்த தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நோக்கியா நிறுவனம் தற்போது மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு என்9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதுதான் இந்த தொழில்நுட்பத்திலான முதல் மற்றும் கடைசி ஸ்மார்ட்போன் என அவர் கூறினார். ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் உபகரணங்களும் பெரும்சவாலாக உள்ளன. அடிபப்டை மொபைல்போன்கள் வர்த்தகத்தில், ஆசிய அளவில், இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும், சீனாவின் இசட்டீஈ நிறுவனமும் உள்ளதாக அவர் கூறினார். இந்த மாதத்தில் ஸ்மார்ட்போன் வர்த்தகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், முதலிடதத்தில் சாம்சங் எலெக்ட்ரானிக்சும், இரண்டாம் இடத்தில் ஆப்பிள் நிறுவனமும் உள்ளது. மூன்றாம் இடத்தில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இமெயில், டேட்டா, ஃபேக்ஸ் என பல்வேறு சிறப்பம்சங்களை உட்புகுத்தி 1996ம் ஆண்டில் முதலிடத்த்தில் இருந்த நோக்கியா நிறுவனம், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பி்ப்ரவரி மாதம் வரை மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்து வந்த நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பிறகு, விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்ய தி்ட்டிமிட்டு அதற்கான நடவடிக்கைகளும் துரிதகதியில் நடைபெற்று வந்தன. இந்தாண்டு இறுதிக்குள் விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, மக்களுக்கு இதற்கு இருக்கும் வ‌ரவேற்பை பொறுத்து, 2012ம் ஆண்டில் அதிகளவிலான விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை அதிகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)