பதிவு செய்த நாள்
28 ஜூன்2011
13:19
பீஜிங் : சர்வதேச அளவில் தொலைதொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவைச் சேர்ந்த ஹூவாவே டெக்னாலஜீஸ் நிறுவனம், இந்தியாவில் எண்டர்பிரைசஸ் சேவையை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாது புதிதாக கம்யூனிகேசன் பிரிவிலும் களமிறங்க உள்ளதாகவும், இத்னகாரணமாக, தொலைதொடர்பு நெட்வொர்க்களில் புதிய உத்திகள் புகுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. சீனாவின் சென்ஜென் மாகாணத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த ஹூவாவே நிறுவன எண்டர்பிரைசஸ் பிரிவின் தலைவர் தபீங் ஹி கூறியதாவது, ஹூவாவே நிறுவனம், சர்வதேச அளவில் தொலைதொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் இரண்டாவது இடத்தில் (முதலிடத்தில் எரிக்சன்) உள்ளது. 2010ம் ஆண்டில், தங்கள் நிறுவம் ரூ. 1,26,000கோடி என்ற அளவிற்கு வருமானம் ஈட்டியுள்ளது. இந்தியாவில் எண்டர்பிரைசஸ் பிரிவு சேவை, கொடிகட்டிப் பறக்கிறது. இந்தியாவில், நடப்பு ஆண்டில் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம், அதற்காக, புதிதாக 400 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|