பதிவு செய்த நாள்
28 ஜூன்2011
15:58
மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியி்ல், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 80.04 புள்ளிகள் அதிகரித்து 18492.45 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 18.70 புள்ளிகள் அதிகரித்து 5545.30 என்ற அளவிலும் முடிவடைந்தது. ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ, ஹெச்டிஎப்சி, பஜாஜ் ஆட்டோ, பெல், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப், ஏபிஜி ஷிப்யார்டு, ஜீபிலாண்ட் ஃபுட்வொர்க்ஸ், எஸ்பிஐ, லார்சன் அண்ட் டூப்ரோ, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்தபோதிலும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டிஎல்எப், ஜிண்டால் ஸ்டீல், விப்ரோ, ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர், கெயில், பீபிசிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|