பதிவு செய்த நாள்
30 ஜூன்2011
15:33
புதுடில்லி : நாட்டின் முன்னணி மற்றும் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ ஹோண்டா நிறுவனம் விரைவில் நான்காவது உற்பத்தி யூனிட்டை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ( மார்க்கெட்டிங் அண்ட் சேல்ஸ் பிரிவு) மூத்த துணை தலைவர் அனில் துவா கூறியதாவது, இந்தியாவில், தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இதன்காரணமாக தேவை அதிகரித்துள்ளது. தற்போது, தங்கள் நிறுவனம் சார்பில் 3 உற்பத்தி யூனிட்கள் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் நான்காவது யூனிட்டை அமைக்க இருப்பதாக அவர் கூறினார். இந்த புதிய யூனிட் குஜராத் அல்லது கர்நாடக மாநிலத்தில் அமைய வாய்ப்பிருப்பதாக அவர் சூசகமாக தெரிவித்தார். இருந்தபோதிலும், புதிய யூனிட்டிற்கான முதலீடு, தயாரிப்புத் திறன் உள்ளிட்ட தகவல்களை அவர் கூற மறுத்து விட்டார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|