பதிவு செய்த நாள்
30 ஜூன்2011
15:59
மும்பை : வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 152.01 புள்ளிகள் உயர்ந்து 18845.87 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 46.95 புள்ளிகள் அதிகரித்து 5647.40 என்ற அளவிலும் முடிவடைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, என்டிபி்சி, இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்டிஎப்சி, இன்போசிஸ், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்ததன் காரணத்தினால் நிப்டி 5650 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. நடுத்தரவகை நிறுவனங்களான மைண்ட்டிரீ, ஜீபிலாண்ட் புட்வொர்க்ஸ், ஹிமாத்ரி கெமிக்கல், ராஷ்டிரிய கெமிக்கல், காட்ஃபிரே பிலிப் மற்றும் நடுத்தர வதக நிறுவனங்களான சுப்ரீம் இன்ப்ரா, ஆசியன் ஹோட்டல் (இ), கேஆர்பிஎல், சுரானா கார்ப், குஜராத் ஆல்கலீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், ஜிடிஎல், நெட்வொர்க் 18, ஜெயின் இரிகேஷன், எடில்வைய்ஸ் கேப்பிடல், சி அண்ட் சி கன்ஸ்ட்ரக்சன், சென்ட்ரம் பைனான்ஸ், வராட் வென்சர்ஸ், எஸ்வி எலெக்ட்ரிகல்ஸ், நியூடைம் இன்ப்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|