மின் வாரிய கடன் பத்திர வெளியீட்டிற்கு வரவேற்புமின் வாரிய கடன் பத்திர வெளியீட்டிற்கு வரவேற்பு ... கரும்பு வரத்து குறைந்ததால் நாட்டு சர்க்கரை உற்பத்தி முடக்கம் கரும்பு வரத்து குறைந்ததால் நாட்டு சர்க்கரை உற்பத்தி முடக்கம் ...
சோப்பு, ஷாம்பூ விலையை குறைக்குமா நிறுவனங்கள்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2011
23:51

புதுடில்லி: பாமாயில் உள்ளிட்ட பல மூலப் பொருள்களின் விலை குறைந்துள்ளது. ஆனால், நுகர்பொருள் நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை குறைக்காமல் உள்ளன. ஐ.ஐ.எப்.எல் இன்ஸ்டிடியூஷனல்ஈக்யூட்டிஸ் என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வில், பல மூலப் பொருள்களின் விலை குறைந்துள்ள நிலையிலும்,இத்துறையில், ஈடுபட்டு வரும், இமாமி, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் மற்றும் மாரிக்கோ ஆகிய நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்பு பொருள்களின் விலையை குறைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.நடப்பாண்டு மே 11ம் தேதி நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு டன் பாமாயிலின் விலை, 57 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. இது, ஜூன் 24ம் தேதி 54 ஆயிரத்து 400 ரூபாயாக குறைந்துள்ளது. சோப்பு உள்ளிட்ட ஆரோக்ய பராமரிப்பு பொருள்கள் தயாரிப்பிற்கு, பாமாயில், முக்கிய மூலப் பொருளாக விளங்குகிறது. பாமாயில் விலை, டன்னுக்கு 3,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஆனால், நுகர்பொருள்நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகளின் விலையை குறைக்கவில்லை.இது குறித்து இந் நிறுவனங்களைச் ÷Œர்ந்த உயரதிகாரிகள் கூறியபோது, 'தற்போது பாமாயிலின் விலை குறைந்துள்ளது என்றாலும், முன்பு பாமாயில் உள்ளிட்ட இதர மூலப் பொருள்களின் விலை மிகவும் அதிகரித்திருந்த போது, அந்த விலை உயர்வினால் ஏற்பட்டகூடுதல் செலவை, நாங்கள் நுகர்வோர் மீது திணிக்கவில்லை. அப்போது, ஏற்பட்ட இழப்பை தற்போது உள்ள விலையினால் ஈடு செய்கிறோம்' என்றுதெரிவித்தனர்.இது குறித்து கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர், ஆதி கோத்ரெஜ் கூறுகையில்,'முன்பு மூலப் பொருள்களின் விலை, பன்மடங்கு அதிகரித்திருந்த போது, நாங்கள் தயாரிப்பு பொருள்களின் விலையை உயர்த்தவில்லை. எனவே, தற்போது, விலை குறைப்பு திட்டம் எதுவும்இல்லை' என்று தெரிவித்தார்.இதே போன்று, தாபர் நிறுவனத்தின் உயரதிகாரியும், 'நிறுவனம், கேச பராமரிப்பு எண்ணெய் உள்ளிட்ட ஆரோக்ய பராமரிப்பு பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில், பாமாயில் பயன்பாடு, மிக மிக குறைவான அளவில்தான் உள்ளது. எனவே, தயாரிப்பு பொருள்களின் விலையை குறைக்கும் எண்ணமில்லை' என்று கூறினார்.அதேசமயம், கோல்கட்டாவைச் சேர்ந்த இமாமி நிறுவனம், அதன் 'ஹெல்தி அண்டு டேஸ்டி' சமையல் எண்ணெய் விலையை 10 சதவீதம் குறைத்துள்ளது. இது பற்றி இந்நிறுவனத்தின் இயக்குனர் ஆதித்ய அகர்வால் கூறுகையில், நிறுவனம், பல சமையல் எண்ணெய் வகைகளின் விலையை குறைத்துள்ளது. மூலப் பொருள்களின் விலை குறையும் நிலையில், மேலும், விலை குறைப்பு மேற்கொள்ளப்படும். இருப்பினும், விலைக் குறைப்பு என்பது சந்தை நிலவரத்தை பொறுத்தே இருக்கும்' என்று தெரிவித்தார்.நுகர்பொருள் துறையில், முன்னணியில் உள்ள இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கு மூலப் பொருள்களின் விலை குறைவால், குறைந்த கால அடிப்படையில், லாபம் கிடைக்கும் என்றாலும், இத்துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியால் லாப வரம்பை தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்ள இயலாது என ஐ.ஐ.எப்.எல். இன்ஸ்டிடியூஷனல் ஈக்யூட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.புராக்டர் அண்டு கேம்பிள், ஐ.டி.சி உள்ளிட்ட அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் தவிர, மண்டல அளவில் செயல்படும் அமைப்பு சாராத நிறுவனங்களும், சோப்பு மற்றும் சலவைத் தூள் துறையில், கடும் போட்டியை சந்தித்து வருகின்றன.மூலப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்த போது, இந்நிறுவனங்களின் செயல்பாடு மிகவும் பாதிக்கப்பட்டது என, ஐ.ஐ.எப்.எல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)