பதிவு செய்த நாள்
30 ஜூன்2011
23:53
கோபிசெட்டிபாளையம்: ஈரோடில், கரும்பு சீசன் நிறைவு மற்றும் உற்பத்தி குறைவால், 200க்கும் மேற்பட்ட நாட்டு சர்க்கரை உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. உற்பத்தி குறைவால், நாட்டு சர்க்கரை, மூட்டைக்கு, 50 ரூபாய் உயர்ந்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில், தடப்பள்ளி,அரக்கன்கோட்டை, எல்.பி.பி., காலிங்கராயன் ஆகிய பாசனப் பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கரில், கரும்பு பயிரிடப்படுகிறது.பதிவு செய்த கரும்பை தவிர, பிற கரும்பு, நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. கோபி சுற்று வட்டாரத்தில், நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்ல உற்பத்தி ஆலைகள், அதிக அளவில் உள்ளன.கடந்தாண்டில், மஞ்சள் விலை உயர்வால், கரும்பு விவசாயிகள் பலர், மஞ்சள் சாகுபடிக்கு மாறினர். இதனால், வெல்ல உற்பத்திக்கு தேவையான கரும்பு இல்லை.கரும்பு பயிரிட்டிருந்த விவசாயிகள் சிலர், தங்கள் தோட்டத்தில் நேரடியாக வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்தனர். கரும்பு சீசன் முடிந்து விட்டதால், மாவட்டம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட நாட்டு சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.கோபியை சேர்ந்த, நாட்டு சர்க்கரை உற்பத்தியாளர் ரமேஷ் கூறியதாவது:சென்ற இரு வாரத்துக்கு முன், அச்சு வெல்லம், 30 கிலோ மூட்டை, 780 முதல், 850 ரூபாய் வரை, உருண்டை வெல்லம், 750 முதல், 810 ரூபாய் வரை விற்றது. இவற்றின் தேவை குறைந்ததால், மூட்டைக்கு, 60 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைந்து விட்டதால், 50 ரூபாய் உயர்ந்து, 60 கிலோ மூட்டை, 1,250 முதல், 1,400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கூலி உயர்வு, கரும்பு பயிரிடுவது குறைந்து விட்டதால், நாட்டு சர்க்கரை ஆலைகள் பல மூடப்பட்டுள்ளன.ஏற்கனவே உள்ள கரும்பு அறுவடையாகி, வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை உற்பத்தி முடிவடைந்துள்ளது. கரும்பு வரத்து சரியாக இல்லாததால், ஈரோடு முழுவதும், 200க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு ரமேஷ் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|