பதிவு செய்த நாள்
01 ஜூலை2011
09:56
மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்றும் சேர்த்து, தொடர்ந்து ஆறாவது நாளாக . பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது பங்குமுதலீட்டாளர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 185.51 புள்ளிகள் அதிகரித்து 19,031.38 என்ற அளவிலும், தேசிய பங்குச்ச்நதை (நிப்டி) 58.40 புள்ளிகள் அதிகரித்து 5,705.80 என்ற அளவிலும் இருந்தது. கடந்த 6 வர்த்தககால அளவுகளில், சென்செக்ஸ் 1,297 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உணவுப் பணவீக்கம் குறைவு உள்ளிட்ட காரணங்களினாலேயே பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளதாக பங்குவர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிய பங்குச்சந்தைகளிலும், உயர்வு நிலையே நீடித்தது. ஜப்பான் பங்குச்சந்தை 0.48 சதவீத ஏற்றத்துடன் துவங்கியது. ஹாங்காங்கில் இன்று பொதுவிடுமுறையாதலால், அங்கு பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|