பதிவு செய்த நாள்
01 ஜூலை2011
14:03
மும்பை : விவசாய உபகரணங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எஸ்கார்ட்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்காக புதிதாக இஞ்ஜின் ஆயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தி்த்த எஸ்கார்ட்ஸ் இஞ்ஜினியரிங் பிரிவின் உயர் அதிகாரி விக்ரம் சிங்கால் கூறியதாவது, தங்கள் நிறுவனம் ட்ரூகார்டு இஞ்ஜின் ஆயிலோடு நிறுத்திக்கொள்ளாமல், மல்டி பர்போஸ் கிரீஸ் மற்றும் டெலஸ்கோபிக் பிரென்ட் போர்க் ஆயிலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ரூகார்டு இஞ்ஜின் ஆயில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம், இஞ்ஜினின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது, எரிபொருள் சேமிப்பு உறுதி செய்யப்படுகிறது, ஆயில் கெட்டிப்படுதலை தடுத்து அதன்மூலம் எமிஷன் விகிதத்தை அதிரடியாக குறைக்கிறது மற்றும் இஞ்ஜினில் கார்பன் படிதலை கூடுமானவரை தடுத்து அதற்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வழங்கும் வகையில் இந்த ட்ரூகார்டு இஞ்ஜின் ஆயில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|