பதிவு செய்த நாள்
01 ஜூலை2011
15:59
மும்பை : தொடர்ந்து ஏழாவது நாட்களாக ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இன்று வர்த்தகநேர இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 83.07 புள்ளிகள் குறைந்து 18762.80 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 20.20 புள்ளிகள் சரிவடைந்து 5627.20 என்ற அளவிலும் இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐடிசி, ஹெச்டிஎப்சி பேங்க், லார்சன் அண்ட் டூப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டிஎல்எப், ஹிண்டால்கோ, கெய்ர்ன் இந்தியா, ஐடிஎப்சி, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ஓஎன்ஜிசி, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், கெயில், பிரைம் போகஸ், டிக்யூ எண்டர்டெயின்மெண்ட்,முகந்த், ஜிண்டால் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், ஓஎன்ஜி்சி, இன்போசிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், ரான்பாக்சி லேப்ஸ், பார்தி ஏர்டெல், மாருதி சுசூகி, மகிந்திரா அண்ட் மகிந்திரா, இந்தியாபுல்ஸ் பைனான்சியல், டெக்ப்ரோ சிஸ்டம்ஸ், புளூ டார்ட், ஐஎப்சிஐ, வீடியோகான் இண்டஸ்டரீஸ், நெட்வொர்க் 18, மைண்ட்டிரீ உள்ளி்ட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|