பதிவு செய்த நாள்
01 ஜூலை2011
16:40
மும்பை/புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான டாடா டொகாமோ நிறுவனம், எஸ்எம்எஸ் (குறுந்தகவல் சேவை) மற்றும் எஸ்டிடி சேவைக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் அதிகரி்தது வரும் நிலையில், புதிது புதிதாக கட்டண குறைப்பை நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில், எஸ்எம்எஸ் மற்றும் எஸ்டிடி கட்டணத்தை டாடா டொகாமோ அதிகரித்திருப்பது அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக, டாடா டொகாமோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லோக்கல் எஸ்எம்எஸ் கட்டண விகிதங்கள் 67 சதவீதம் அதிகரி்த்து, எஸ்எம்எஸ் ஒன்றிற்கு 60 பைசா என்ற அளவில் இருந்து ரூ. 1 என்ற அளவிலும் , உள்ளூர் எஸ்எம்எஸ்களுக்கு 25 சதவீதமும், நேசனல் எஸ்எம்எஸ், ரூ. 1.20 என்ற அளவிலிருந்து ரூ. 1.50 என்ற அளவிற்கும் அதிகரித்துள்ளது. அதேபோல், 2 வினாடிகளுக்கு 1 பைசா என்ற அளவில் இருந்த எஸ்டிடி அழைப்பு கட்டணத்தை வினாடிக்கு 2 பைசா என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|