தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு ... தேங்கியிருக்கும் ரூ.36 கோடி போர்வை ரகங்கள் கொள்முதல்: கோ-ஆப்டெக்ஸ்  திட்டம் தேங்கியிருக்கும் ரூ.36 கோடி போர்வை ரகங்கள் கொள்முதல்: கோ-ஆப்டெக்ஸ் திட்டம் ...
நூல்விலை உயர்வால் செட்டிநாடு காட்டன் சேலை உற்பத்திக்கு சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2011
12:41

காரைக்குடி: நூல் விலை உயர்வால் காரைக்குடி 'செட்டிநாடு காட்டன் சேலை' உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு, ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் நெசவு தொழில் செய்கின்றனர். இங்கு தயாராகும் செட்டிநாடு காட்டன் சேலைகள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், நகரத்தார் இச்சேலைகளை விரும்பி வாங்குகின்றனர். தரமான நூல், எளிதில் சாயம் போகாது, நீண்ட நாள் உழைக்கும் சிறப்பு கொண்டவை. இதனால் செட்டிநாடு காட்டனுக்கு மவுசு அதிகம். நலிவு: தற்போது, காட்டன் சேலைக்கான நூல் விலை உயர்ந்துவிட்டது. அதிக விலைக்கு நூல் வாங்கி நெய்ய, முன்வரவில்லை. நெசவில் போதிய வருமானம் இல்லை. தொழில் நசிகிறது. நெசவாளர்கள் பிழைப்பிற்காக வெளிமாவட்டம் செல்கின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக காட்டன் சேலை உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து குருநாதன் (70) கூறுகையில், ''கணவன், மனைவி வேலை செய்தால், இரண்டு நாளில் ஒரு சேலை நெய்யலாம். சேலைக்கு 130 ரூபாய் சம்பளம். மாதம் 15 சேலைகள் நெய்வோம். விலைவாசி உயர்வால், குடும்பம் நடத்த இந்த வருமானம் போதுமானதாக இல்லை,'' என்றார். மகேஷ்வரி (62), கூறுகையில், ''கணவர் இறப்பிற்கு பின், நெசவு தொழில் செய்கிறேன். காட்டன் சேலை கோடையில் அதிகளவில் விற்கும். நூல் விலை உயர்வால், தொழிலை பலர் கைவிட்டனர். இதனால் சேலை உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என்றார். கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனியப்பன் கூறுகையில், '' ஐந்து ஆண்டுகளாக நெசவு தொழிலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நூல் விலை, சாயபவுடர் விலை உயர்ந்துவிட்டது. ஆனால், கூலியை உயர்த்தவில்லை. இங்கு 650 தறி மூலம் மாதம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலைகள் உற்பத்தியாயின. தற்போது, 12,000 மட்டுமே உற்பத்தியாகிறது,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)