நூல்விலை உயர்வால் செட்டிநாடு காட்டன் சேலை உற்பத்திக்கு சிக்கல்நூல்விலை உயர்வால் செட்டிநாடு காட்டன் சேலை உற்பத்திக்கு சிக்கல் ... பஜாஜ் மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு பஜாஜ் மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு ...
தேங்கியிருக்கும் ரூ.36 கோடி போர்வை ரகங்கள் கொள்முதல்: கோ-ஆப்டெக்ஸ் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2011
13:56

சென்னிமலை : ''ஈரோடு மாவட்டத்தில், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும், 36 கோடி ரூபாய் மதிப்புள்ள கைத்தறி போர்வை, பெட்ஷீட், திரைத்துணி, தலையணை உறை, துண்டு ரகங்கள், வரும் அக்டோபர் மாதத்துக்குள் கொள்முதல் செய்யப்படும்,'' என கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உமாசங்கர் தெரிவித்தார். சென்னிமலை சென்டெக்ஸ், சென்கோப்டெக்ஸ் ஆகிய கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில், கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உமாசங்கர் ஆய்வு செய்தார். அப்போது, நெசவாளர்கள்,'அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தொகை நிலுவையில் உள்ளது. அரசு, சீருடை தயாரிக்க ஆண்டு முழுவதும் ஆர்டர் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு தொகை நிலுவை போன்றவற்றை வழங்க வேண்டும்' என்று கோரினர். நிருபர்களிடம் இயக்குனர் உமாசங்கர் கூறியதாவது: பிரதம சங்கங்கள் உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்களுக்கு விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க, கோ- ஆப்டெக்ஸ் துவங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பிரதம நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம், உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளை விற்பனை செய்ய ஏதுவாக, இந்தியா முழுவதும், 200 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் வரை கைத்தறி துணி ரகங்கள் விற்பனையாகின்றன. வரும் காலங்களில், ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வரை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக, தற்போதுள்ள விற்பனை நிலையங்களில், 51 மையங்களை நவீன மயமாக்க உள்ளோம். நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆண்டு முழுவதும் சீருடை துணிகள் தயாரிக்க, கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு, 600 கோடி ரூபாய்க்கு இலவச வேட்டி, சேலை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், பல மாதமாக விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும், 36 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி போர்வை, பெட்ஷீட், திரைத்துணி, தலையணை உறை, துண்டு ரகங்கள், வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் கொள்முதல் செய்யப்படும். தற்போது, கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களுக்கு ஜவுளி கொள்முதல் செய்த ஒரு வாரத்தில், பணம் பட்டுவாடா செய்ய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு உமாசங்கர் கூறினார். ஈரோடு சரக கைத்தறி உதவி இயக்குனர் குமாரவேல், கோ-ஆப்டெக்ஸ் பொது மேலாளர்கள் ஆறுமுகம், சங்கரலிங்கம், ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)