பதிவு செய்த நாள்
07 ஜூலை2011
14:09
ஐதராபாத்: 19 வங்கிகள் இணைந்து நடத்தும் பொதுத்தேர்வு வரும் செப்டம்பர் 18ம் தேதி நடக்கவுள்ளது. நாட்டில் உள்ள 19 வங்கிகள் (பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகள்) ஒன்றிணைந்து ஒரே பொதுத்தேர்வு நடத்துவதென முடிவு செய்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கிக்கென தனி தேர்வு திட்டம் இருப்பதால், அந்த வங்கி இதில் கலந்து கொள்ள வில்லை. தி இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் செலக்ஷன் எனப்படும் ஓர் அமைப்பின் கீழ் நடத்தப்படும் இந்த தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள், புரோபேஷனரி ஆபீசர் மற்றும் மேனேஜ்மென்ட் டிரெய்னி போன்ற பணிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தேர்வில், ரீசனிங், குவான்டிடேடிவ் ஆப்டிடியூட் கேள்விகள் இடம் பெறும். ஆங்கில தேர்வும் உண்டு. இதில் பெறும் மதிப்பெண்கள் ஒரு வருடம் வரை செல்லத்தக்கதாகும். வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள இந்த தேர்வில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக தி இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் செலக்ஷன் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|