பதிவு செய்த நாள்
07 ஜூலை2011
16:27
ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தைகளில் இரண்டு நாட்களில் குவிண்டாலுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. தினசரி ஏற்படும் மஞ்சள் விலை மாற்றத்தால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர். ஈரோட்டில் கடந்த மாதம் விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 5,546 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 8,279 ரூபாய் வரை ஏலம் போனது. கிழங்கு மஞ்சள் தேவை குறைவால், குவிண்டால் குறைந்தபட்சம் 5,106 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 7,448 ரூபாய் வரை ஏலம் போனது. விலை சரிவு காரணமாக விவசாயிகள் குறைந்தளவே மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நான்கு மாதங்களுக்கு முன் ஈரோடு மஞ்சள் சந்தைகளுக்கு தினசரி சராசரியாக 10 ஆயிரம் ரூபாய் வரை வரத்தானது. போதிய விலை கிடைக்காததால், தற்போது நான்கு சந்தைகளிலும் தினசரி 2,000 மூட்டைகளே வருகிறது. சென்ற மாதம் இறுதியில் மஞ்சள் விலை ஏறுமுகமாகவே இருந்தது. அதையடுத்து, விவசாயிகளும் சந்தையில் இருப்பு வைத்திருந்த மஞ்சளை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வந்தனர். இம்மாதம் துவக்கத்தில் விரலி குவிண்டால் 7,558ல் இருந்து அதிகபட்சமாக 8,419 ரூபாய்க்கு விற்றது. கிழங்கு 7,106ல் இருந்து அதிகபட்சமாக 7,606 ரூபாய்க்கு விற்றது. நேற்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி 7,193ல் இருந்து அதிகபட்சமாக 7,819 ரூபாய், கிழங்கு 6,939ல் இருந்து அதிகபட்சமாக 7,444 ரூபாய்க்கு ஏலம் போனது. 325 மஞ்சள் மூட்டைகள் வரத்தானதில் 302 மூட்டைகள் விற்றன. வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால், திங்களை விட, நேற்று விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு 400 ரூபாய் வரையும், கிழங்கு 300 ரூபாய் வரையும் விலை குறைந்துள்ளது. தினசரி அரங்கேறும் மஞ்சள் விலை மாற்றத்தால் விவசாயிகள் நாளை மஞ்சள் விலை குறையுமா? ஏறுமா? என, தெரியாமல் தவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|