19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது மும்பை பங்குச்சந்தை19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது மும்பை பங்குச்சந்தை ... 19 ஆயிரம் புள்ளிகளை கடந்து ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை 19 ஆயிரம் புள்ளிகளை கடந்து ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை ...
ஒரே நாளில் மஞ்சள் விலை ரூ.400 சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2011
16:27

ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தைகளில் இரண்டு நாட்களில் குவிண்டாலுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. தினசரி ஏற்படும் மஞ்சள் விலை மாற்றத்தால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர். ஈரோட்டில் கடந்த மாதம் விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 5,546 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 8,279 ரூபாய் வரை ஏலம் போனது. கிழங்கு மஞ்சள் தேவை குறைவால், குவிண்டால் குறைந்தபட்சம் 5,106 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 7,448 ரூபாய் வரை ஏலம் போனது. விலை சரிவு காரணமாக விவசாயிகள் குறைந்தளவே மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நான்கு மாதங்களுக்கு முன் ஈரோடு மஞ்சள் சந்தைகளுக்கு தினசரி சராசரியாக 10 ஆயிரம் ரூபாய் வரை வரத்தானது. போதிய விலை கிடைக்காததால், தற்போது நான்கு சந்தைகளிலும் தினசரி 2,000 மூட்டைகளே வருகிறது. சென்ற மாதம் இறுதியில் மஞ்சள் விலை ஏறுமுகமாகவே இருந்தது. அதையடுத்து, விவசாயிகளும் சந்தையில் இருப்பு வைத்திருந்த மஞ்சளை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வந்தனர். இம்மாதம் துவக்கத்தில் விரலி குவிண்டால் 7,558ல் இருந்து அதிகபட்சமாக 8,419 ரூபாய்க்கு விற்றது. கிழங்கு 7,106ல் இருந்து அதிகபட்சமாக 7,606 ரூபாய்க்கு விற்றது. நேற்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி 7,193ல் இருந்து அதிகபட்சமாக 7,819 ரூபாய், கிழங்கு 6,939ல் இருந்து அதிகபட்சமாக 7,444 ரூபாய்க்கு ஏலம் போனது. 325 மஞ்சள் மூட்டைகள் வரத்தானதில் 302 மூட்டைகள் விற்றன. வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால், திங்களை விட, நேற்று விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு 400 ரூபாய் வரையும், கிழங்கு 300 ரூபாய் வரையும் விலை குறைந்துள்ளது. தினசரி அரங்கேறும் மஞ்சள் விலை மாற்றத்தால் விவசாயிகள் நாளை மஞ்சள் விலை குறையுமா? ஏறுமா? என, தெரியாமல் தவிக்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)