பதிவு செய்த நாள்
07 ஜூலை2011
16:27
மும்பை: பங்குச்சந்தையில் இன்று நாள்முழுவதும் ஏற்றமான போக்கே காணப்பட்டது. காலை நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 76 புள்ளிகள் உயர்ந்து 18802.88 புள்ளிகளாகவும், நிப்டி 18.75 புள்ளிகள் உயர்ந்து 5644.20 புள்ளிகளாகவும் இருந்தது. இன்று வெளியிடப்பட்ட கடந்த வாரத்திற்கான உணவுப்பணவீக்கம் தொடர்ந்து குறைந்து, 7.61 சதவீதமாக இருந்ததன் காரணமாக இரண்டு மாதங்களுக்குப்பிறகு இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் 19 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவன பங்குகள் அதிகரித்ததும் இன்றைய பங்குச்சந்தையின் அதிரடியான ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய வர்த்தகநேர இறுதியில், சென்செக்ஸ் 351.33 புள்ளிகள் உயர்ந்து 19078.30 புள்ளிகளிலும், நிப்டி 103.5 புள்ளிகள் உயர்ந்து 5728.95 புள்ளிகளிலும் முடிந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|