பதிவு செய்த நாள்
08 ஜூலை2011
12:17
கொடைக்கானல் : கொடைக்கானலில், நோய் தாக்குதலால் ஆப்பிள்கள் பிஞ்சிலேயே கருகி வருகின்றன. இங்கு, தற்போது ஆப்பிள் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. காஷ்மீர், சிம்லா ஆப்பிளை போல் அதிக சுவை இருக்காது என்றாலும், இனிப்பு, புளிப்பு கலந்த கொடைக்கானல் ஆப்பிளுக்கு 'மவுசு' அதிகம். அப்சர்வேட்டரி, புதுக்காடு பகுதியில் முன்பு அதிகளவில் விளைந்தது. பருவநிலை மாற்றத்தால், உற்பத்தி வெகுவாக குறைந்தது. தென்மேற்கு பருவ மழையில் ஆப்பிள் விளைச்சல் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. பிஞ்சு பெருக்கும் நேரத்தில் பூச்சிகள் தாக்குதலால் கருகி வருகின்றன. பணம் செலவழித்தும் விளைச்சல் இல்லாததால், மலைக்கிராம விவசாயிகள் மீளா துயரில் உள்ளனர். தோட்டக்கலை துறையினர் கூறுகையில்,''பருவ நிலை மாற்றத்தால் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மாதிரி காய்களை ஆய்வுக்காக எடுத்து வர அறிவுறுத்தியுள்ளோம். இழப்பீடு வழங்குவது குறித்து அரசு தான் முடிவு செய்யும்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|