பார் வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.2155 உயர்வுபார் வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.2155 உயர்வு ... நாட்டின் பணவீக்கம் 9.44 சதவீதம் உயர்வு நாட்டின் பணவீக்கம் 9.44 சதவீதம் உயர்வு ...
நாட்டின் உணவு பணவீக்கம் 8.31% ஆக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2011
11:55

புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் 8.31 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூலை 02ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான உணவு பணவீக்கம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பணவீக்கம் விகிதம் கடந்த வாரத்தை விட 0.70 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் உணவு பணவீக்கம் 7.61 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வாரங்களாக சரிந்து வந்த உணவு பணவீக்கம், உணவு பொருட்களின் விலை அதிகரித்ததை அடுத்து இந்த வாரம் மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள உணவு பணவீக்க குறிப்பின்படி பழங்களின் விலை 13.54 சதவீதமும், பால் விலை 12.39 சதவீதமும் அதிகரித்துள்ளது. முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலை 11.95 சதவீதம் அதிகரித்துள்ளது. பருப்புக்களின் விலை 5.40 சதவீதமும், காய்கறிகளின் விலை 2.25 சதவீதமும் உயர்ந்துள்ளது. குறிப்பாக வெங்காயத்தின் விலை 30.72 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் தானியங்கள் மற்றும் உருளைக்கிழங்கின் விலை குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)