பதிவு செய்த நாள்
15 ஜூலை2011
10:24
சென்னை:ஆபரணத் தங்கம் விலை, நேற்று ஒரே நாளில், சவரனுக்கு, 200 ரூபாய் வரை அதிகரித்து, 17 ஆயிரத்து, 368 ரூபாய்க்கும், ஒரு கிராம், 2,171 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த நான்கு நாட்களில் மட்டும், சவரனுக்கு, 528 ரூபாய் வரை அதிகரித்தது. கடந்த 11ம் தேதி, சவரன், 16 ஆயிரத்து, 840 ரூபாய்க்கும், ஒரு கிராம், 2,105 ரூபாய்க்கும் விற்பனையானது. மறுநாள் (12ம் தேதி) சவரனுக்கு, 104 ரூபாய் அதிகரித்து, 16 ஆயிரத்து, 944 ரூபாய்க்கும், ஒரு கிராம், 2,118 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று முன்தினம், சவரனுக்கு, 224 ரூபாய் வரை அதிகரித்து, சவரன், 17 ஆயிரத்து, 168 ரூபாய்க்கும், ஒரு கிராம், 2,146 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று காலை நிலவரப்படி, சவரனுக்கு, 88 ரூபாய் அதிகரித்து, 17 ஆயிரத்து, 256 ரூபாய்க்கும், ஒரு கிராம், 2,157 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.மாலையில், சவரனுக்கு மேலும், 112 ரூபாய் அதிகரித்து, 17 ஆயிரத்து, 368 ரூபாய்க்கும், ஒரு கிராம், 2,171 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில், சவரனுக்கு, 200 ரூபாய் வரை அதிகரித்தது. கடந்த நான்கு நாட்களில் மட்டும், 528 ரூபாய் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|