பதிவு செய்த நாள்
15 ஜூலை2011
15:41
புதுடில்லி: சக நிறுவனங்களான ஜி.எஸ்.பி.சி., மற்றும் ஓ.என்.ஜி.சி., போன்றவற்றை விட மிகக் குறைந்த விலையில் அரசுக்கு காஸ் விற்பனை செய்வதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கிருஷ்ணா கோதாவரி படுகையில், டி1/டி3 வயலில் காஸ் எடுக்கும் பணியை செய்து வருககிறது. இதே போல், 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், மற்றொரு வயலில் காஸ் எடுக்கும் பணியையும் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த பணிகள் மூலம் அரசுக்கு மிகக்குறைந்த அளவே வருமானம் கிடைப்பதாகவும், பெரும்பகுதியை ரிலையன்ஸ் நிறுவனமே எடுத்துக்கொள்வதாகவும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ரிலையன்ஸ், ஜி.எஸ்.பி.சி., மற்றும் ஓ.என்.ஜி.சி., போன்றவற்றை விட மிகக் குறைந்த விலையில் அரசுக்கு காஸ் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|