பதிவு செய்த நாள்
16 ஜூலை2011
00:06
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று சுணக்கமாக இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் பங்கு வியாபாரம் நன்கு இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து காணப்பட்டது. டி.சி.எஸ் நிறுவனத்தின் நிகர லாபம், சந்தை மதிப்பீட்டிற்கும் அதிகமாக இருந்ததையடுத்து, அதன் பங்கின் விலை 2.03 சதவீதம் அதிகரித்திருந்தது.வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், உலோகம், மோட்டார் வாகனம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 56.28 புள்ளிகள் சரிவடைந்து, 18,561.92 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 19,619.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,513.22 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 8 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 18.70 புள்ளிகள் குறைந்து, 5,581.10 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,631.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,562.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|