உலக பங்குச் சந்தைகளால்'சென்செக்ஸ்' 56 புள்ளிகள் சரிவுஉலக பங்குச் சந்தைகளால்'சென்செக்ஸ்' 56 புள்ளிகள் சரிவு ... சிட்டி குழும காலாண்டு நிகரலாபம் 24% உயர்வு சிட்டி குழும காலாண்டு நிகரலாபம் 24% உயர்வு ...
சிம்கார்டில் பேசும் புதிய போன்:அறிமுகப்படுத்தியது பி.எஸ்.என்.எல்.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2011
09:29

கோவை : மொபைல் சிம்கார்டு மூலம் பேசக்கூடிய, பிக்சேர்டு ஒயர்லெஸ் போனை பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம், பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. புதிய போனை அறிமுகம் செய்து, பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் ஹரிபாபு கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் போனில் இருந்து, 'பிரண்ட் அண்டு பேமிலி' திட்டத்தில் மொபைல், லேண்ட்லைன் என, மூன்று எண்ணிற்கு சலுகை கட்டணத்தில் பேசலாம். இந்த திட்டத்தில் இரவு நேரத்தில் 10 பைசா, பகல் நேரத்தில் 20 பைசா வசூலிக்கப்படும். இந்திய தொலைபேசி அட்டை (யு.ஐ.டி.சி., கார்டு) மூலம் இந்தியாவிற்குள் எந்த நெட்வொர்க்கிற்கு பேசினாலும், வினாடிக்கு ஒரு பைசா செலவாகும். வெளிநாட்டிற்கு பேசும் போது, வினாடிக்கு மூன்று பைசா வசூலிக்கப்படுகிறது. யு.ஐ.டி.சி., கார்டு திட்டத்தில், ஐந்து எண்ணிற்கு சலுகை பெற முடியும். ஜி.எஸ்.எம்., வகையை சேர்ந்த 'பிக்சேர்டு ஒயர்லெஸ்' (எப்.டபிள்யு.டி.,) போன் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போனில், மொபைல் சிம்கார்டு பொருத்தி பேச முடியும். லேண்ட்லைன் மாதிரி உபயோகிக்கும் முறை உள்ளதால், வயதானோர் எளிதாக கையாள முடியும். மெசேஜ், யு.பி.எஸ்., கேபிள் வசதி இருக்கிறது. இதன் விலை 1,450 ரூபாய். கேபிள் வசதி இல்லாத இடம், கிராம பகுதி, மொபைல் போன் டவர் பிரச்னை உள்ள இடங்களில் எப்.டபிள்யு.டி., பயன்படுத்தலாம். அன்பு ஜோடி பிளான், நேசம் லைப்டைம் பிரிபெய்டு, ரக்ஷக் பிளான் என, பல பிரிபெய்டு திட்டங்கள் உள்ளன. புதிய திட்டங்களுக்கான ரீசார்ஜ் கூப்பன்கள், எல்லா சில்லரை விற்பனை கடைகளிலும் கிடைக்கும். குமரகுரு கல்லூரி, கல்கி தெரு, மத்திய பஸ் ஸ்டாண்ட், எச்.என்.வி.எஸ்.லே-அவுட் உள்ளிட்ட இடங்களில் 3ஜி; உக்கடம், பொள்ளாச்சி (கே.சீ.பீ.,), கரட்டுப்பாளையம் பகுதியில் புதிதாக 2ஜி டவர் அமைக்கப்பட்டுள்ளது. கோவை டைட்டில் பார்க், காளப்பட்டி, திருப்பூர் ஆகிய இடத்தில் புதிய தொலைபேசி நிலையம், ஒயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைக்கு புதிய டவர்கள் நிறுவப்பட உள்ளன. இவ்வாறு, ஹரிபாபு கூறினார். கோவை பொதுமேலாளர் சுனிதா, துணை பொதுமேலாளர் (திட்டம்) நாகராஜு, துணை பொதுமேலாளர் (மார்க்கெட்டிங்) வெங்கட்ராமன் உடனிருந்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)