பதிவு செய்த நாள்
16 ஜூலை2011
15:15
புதுடில்லி : 2010-11ம் ஆண்டில் இந்தியா 241 மில்லியன் டன் உணவு உற்பத்தி என்ற இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய உணவுப்பொருட்களின் உற்பத்தி கடந்த ஓராண்டில் சாதனை படைக்கும் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010-11ம் ஆண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 241 மில்லியன் டன்கள் என்ற இலக்கினை, கோதுமை, மக்காச்சோளம், பயிறு வகைகளில் அதிக உற்பத்தி மூலம் அடையப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியிலும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பினால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. வரும் 2020-21ம் ஆண்டில் இந்தியாவின் உணவுத்தேவை 281 டன்னாக இருக்கும். இந்த இலக்கை அடைவதற்கு வருடம் தோறும் 2சதவீத உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் 2வது பசுமைப்புரட்சி ஏற்பட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|