பாசுமதி அரிசி விலை உயர்வுபாசுமதி அரிசி விலை உயர்வு ... கோவையில் ஹோம் பேஷன் எக்ஸ்போ கோவையில் ஹோம் பேஷன் எக்ஸ்போ ...
241 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்து இந்தியா சாதனை: மன்மோகன் சிங்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2011
15:15

புதுடில்லி : 2010-11ம் ஆண்டில் இந்தியா 241 மில்லியன் டன் உணவு உற்பத்தி என்ற இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய உணவுப்பொருட்களின் உற்பத்தி கடந்த ஓராண்டில் சாதனை படைக்கும் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010-11ம் ஆண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 241 மில்லியன் டன்கள் என்ற இலக்கினை, கோதுமை, மக்காச்சோளம், பயிறு வகைகளில் அதிக உற்பத்தி மூலம் அடையப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியிலும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பினால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. வரும் 2020-21ம் ஆண்டில் இந்தியாவின் உணவுத்தேவை 281 டன்னாக இருக்கும். இந்த இலக்கை அடைவதற்கு வருடம் தோறும் 2சதவீத உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் 2வது பசுமைப்புரட்சி ஏற்பட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)