தமிழக அரசின் வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை  உயர்வுதமிழக அரசின் வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை உயர்வு ... அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ. 14.47 லட்ய்ம் கோடியாக ய்ரிவு அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ. 14.47 லட்ய்ம் கோடியாக ய்ரிவு ...
உலக நிலவரங்களால் பங்கு வர்த்தகத்தில் சரிவு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2011
04:01

முன்பெல்லாம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐ.டி) நிதி நிலை முடிவுகள் வருகிறது என்றால், பங்கு வியாபாரம் சூடு பிடித்து காணப்படும். ஆனால், இப்போது, ஐ.டி நிறுவனங்களின் நிதி நிலை öய்யல்பாடு குறித்த அறிக்கை, பங்கு சந்தையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதற்கு, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவதுதான் காரணம். பலத்த போட்டிகளுக்கிடையே, எந்த ஒரு நிறுவனத்தாலும், வளர்ச்சியை தொடர்ந்து நிலை நிறுத்துவது என்பது இயலாத காரியம்.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கு, இதுவரை நிதி நிலை அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.டி நிறுவனங்களின் öய்யல்பாடு வளர்ச்சி கண்டுள்ளது என்றாலும், அது ய்ந்தை மதிப்பீட்டை விட குறைவாக உள்ளது என்ற காரணத்தால், பங்குகளின் விலை குறைந்து போனது. இந்நிலையில், அன்னிய நிதி நிறுவனங்கள் நடப்பு வாரத்தில் முதலீட்டை விலக்கி கொண்டது, தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்து போனது மற்றும் உலக நிலவரங்களால் பங்கு வர்த்தகத்தில் ய்ரிவு நிலை ஏற்பட்டது.வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 58 புள்ளிகள் சசரிவடைந்து, 18,562 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 18 புள்ளிகள் குறைந்து, 5,581 புள்ளிகளிலும் நிலை கொண்டன. திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஐந்து வர்த்தக தினங்களில், 'சென்செக்ஸ்' 159 புள்ளிகள் சரிந்தும், 'நிப்டி' 35 புள்ளிகள் குறைந்தும் இருந்தன.காலாண்டு முடிவுகள்: பல நிறுவனங்கள், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட தொடங்கி உள்ளன. டி.சி.எஸ், சவுத் இந்தியன் பேங்க், பஜாஜ் பின்கார்ப், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிதி நிலை செயல்பாடு நன்கு உள்ளது. அதேசமயம், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தை மதிப்பீட்டை விட குறைந்து காணப்பட்டது. தொகுப்பில் இருக்க வேண்டிய பங்குகள்: எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் வாங்கி வைக்கலாம். மேலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பங்குகளை வாங்குவதால், அவ்வங்கி வழங்கும் உரிமைப் பங்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வங்கி 20 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டும் வகையில், இரண்டாவது பங்கு வெளியீடு மற்றும் உரிமை பங்கு வெளியீட்டை இவ்வாண்டு இறுதிக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம்: நாட்டின் பணவீக்கம் மீண்டும் பயமுறுத்துகிறது. ஒரு மாதம் கீழே இறங்கினால், அடுத்த மாதத்தில் மேலே உயருகிறது. மத்திய அர÷ய் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறது.öய்ன்ற ஜூன் மாதத்திற்கான பணவீக்கம் 9.44 ய்தவீதம் வரை öய்ன்றுள்ளது. இது, மறுபடியும் இரட்டை இலக்கத்திற்கு öய்ன்று விடுமோ என்ற அச்ய்ப்பாடும் உள்ளது. ரிய்ர்வ் வங்கி மீண்டும் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 ய்தவீதம் உயர்த்தக் கூடும்.இது, நிச்ய்யம் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தி விடும். இனி, எவரும் கடன் வாங்க முடியாத அளவிற்கு வட்டி விகிதங்கள் கூடிக்கொண்டே போகிறது. புதிய வெளியீடுகள்: சந்தை நிலவரம் சரியில்லாததால் ஓ.என்.ஜி.சி நிறுவனம், மீண்டும் அதன் இரண்டாவது பங்கு வெளியீட்டு திட்டத்தை ஒத்தி போட்டுள்ளது. இனி, இதன் பங்கு வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகுதான் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இன்வென்சர் குரோத் அண்டு öய்க்யூரிட்டீஸ் நிறுவனம், துணிந்து அதன் புதிய பங்கு வெளியீட்டை இம் மாதம் 20ம் தேதி கொண்டு வருகிறது. இதன் பங்கு வெளியீடு 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. பங்கின் விலை 100-117 ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், பங்குச் சந்தை மற்றும் நிதி சார்ந்த துறைகளில் ஈடுபட்டு வருகிறது. மறைமுக வரிகள்: நடப்பு 2011-12ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், மறைமுக வரி வசூல், öய்ன்ற ஆண்டின் இதே காலாண்டை விட, 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, நாட்டுக்கும், சந்தைக்கும் பயனளிக்கும். தங்கம்: தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு, ஆபரணங்கள் உள்ளிட்ட நகைகளுக்கு தேவை அதிகரித்து விட்டதாக கருத முடியாது. முதலீடு என்ற நிலைப்பாட்டில், பல்லாயிரக்கணக்கானோர், தங்கத்தை கட்டிகளாக வாங்குவதுடன், ஈ.டி.எப் எனப்படும் தங்கம் ய்õர்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு öய்ய்வதும்தான் இதற்கு முக்கிய காரணம். வரும் வாரம் எப்படி :இருக்கும்? ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை, நிறுவனங்கள் வெளியிட தொடங்கியுள்ளன. நிறுவனங்களின் செயல்பாடு நன்றாக இருந்தாலும், வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன்தான் உள்ளது. முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. வர்த்தகர்களுக்கு இது ஒரு நல்ல சந்தையாக உள்ளது. பங்குகளின் விலை குறையும் போது, நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கி, அவற்றின் விலை கூடும் போது விற்பதற்கு தற்போதைய சந்தை நிலவரம் ஏற்றது. - சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)