அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ. 14.47 லட்ய்ம் கோடியாக ய்ரிவுஅன்னியச் செலாவணி கையிருப்பு ரூ. 14.47 லட்ய்ம் கோடியாக ய்ரிவு ... உணவு தானியங்கள் உற்பத்தியில் புதிய சாதனை:விவசாயிகள், விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு உணவு தானியங்கள் உற்பத்தியில் புதிய சாதனை:விவசாயிகள், விஞ்ஞானிகளுக்கு ... ...
நடப்பாண்டு ஜூன் மாதத்தில்இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2011
04:05

மும்பை:இந்திய நிறுவனங்கள், öய்ன்ற ஜூன் மாதத்தில், அயல்நாடுகளில் மேற்கொண்ட முதலீடு, பாதியாகக் குறைந்து, 547 கோடி டாலராக (25 ஆயிரத்து 162 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, 2010ம் ஆண்டு இதே மாதத்தில், 1,277 கோடி டாலராக (56 ஆயிரத்து 442 கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது. அயல்நாடுகளில் அதிகளவில் முதலீடு öய்ய்ததில், முந்த்ரா போர்ட் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.நடப்பு 2011 - 12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், அயல்நாடுகளில் மேற்கொண்ட மொத்த முதலீடு, 1,057 கோடி டாலராக (48 ஆயிரத்து 622 கோடி ரூபாய்) உள்ளது.இது, 2010 - 11ம் நிதியாண்டின், இதே மாதங்களில், 1,826 கோடி டாலராக (83 ஆயிரத்து 996 கோடி ரூபாய்) மிகவும் அதிகரித்து காணப்பட்டது.ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில், நிதி உத்தரவாதமாக, 390 கோடி டாலரும் (17 ஆயிரத்து 940 கோடி ரூபாய்), கடன்கள் வாயிலான முதலீடு 93.7 கோடி டாலராகவும் (4,310 கோடி ரூபாய்), பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 64.14 கோடி டாலராகவும் (2,950 கோடி ரூபாய்) உள்ளது என, ரிய்ர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முந்த்ரா போர்ட் நிறுவனம், ஆஸ்திரேலியாவில் உள்ள, அதன் துணை நிறுவனமான, முந்த்ரா போர்ட் பிடிஒய் நிறுவனத்தில், கட்டுமான நடவடிக்கைகளுக்காக, 225 கோடி டாலரை (10 ஆயிரத்து 350 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது.இதையடுத்து, தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், பல்வேறு திட்டங்களில், 49.45 கோடி டாலரை (2,275 கோடி ரூபாய்) மூன்று திட்டங்களில் முதலீடு öய்ய்துள்ளது. இதன்படி, நெதர்லாந்து (14 கோடி டாலர்), சிங்கப்பூர் (35 கோடி டாலர்) மற்றும் மொரீஷியஸ் (45 லட்ய்ம் டாலர்) ஆகிய நாடுகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதேசமயம், öய்ன்ற மே மாதத்தில், அன்னிய நிறுவனங்கள், நம் நாட்டில் மேற்கொண்ட முதலீடு, 466 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, 2010ம் ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 111 ய்தவீதம் (221 கோடி டாலர்) அதிகமாகும். இது, கடந்த 11 ஆண்டுகளில், ஒரே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட, இரண்டாவது அதிகபட்ச முதலீடாகும்.நடப்பு நிதியாண்டின், ஏப்., - மே மாத காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 77 சதவீதம் அதிகரித்து 778 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே மாதங்களில், 439 கோடி டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)