பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
11:17
குருவாயூர் : குருவாயூர் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி சேகரிக்கப்பட்டு வந்த, 57 கிலோ தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. கேரளா, திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் சிலர், சுவாமிக்கு நேர்த்திக் கடனாக தங்கம், வெள்ளி உட்பட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்துவது உண்டு. கடந்த சில மாதங்களில் பக்தர்களால் கோவிலுக்கு கிடைக்கப்பெற்ற 57 கிலோ தங்கம், குருவாயூர் தேவஸ்வம் போர்டால் சேகரிக்கப்பட்டு வந்தது. இத்தங்கத்தை நேற்று முன்தினம் தேவஸ்வம் நிர்வாக அதிகாரி கே.எம்.ரகுராமன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் மணிகண்டன் நாயரிடம் ஒப்படைத்தார். இத்தங்க டெபாசிட்டிற்கு வங்கி மூலம் 1 சதவீத வட்டி வழங்கப்படும். இதற்கு முன் இரு தவணைகளில் கோவில் சார்பாக, 550 கிலோ தங்கம் இதே வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|