பாசுமதி அரிசி ஏற்றுமதி  30 சதவீதம் உயர வாய்ப்புபாசுமதி அரிசி ஏற்றுமதி 30 சதவீதம் உயர வாய்ப்பு ... ஜி.எஸ்.டி. குழு தலைவராக சுசில்குமார் மோடி தேர்வு:பொருள் மற்றும் சேவை வரி திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை ஜி.எஸ்.டி. குழு தலைவராக சுசில்குமார் மோடி தேர்வு:பொருள் மற்றும் சேவை வரி ... ...
மாட்டுத் தீவனம் விலை உயர்வு: மானிய விலையில் வழங்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2011
02:36

சேலம்:விண்ணை தொடும் அளவுக்கு மாட்டு தீவனம் விலை உயர்ந்துள்ளது. இதனால், பால் உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையுடன் தீவனத்தின் விலையும் தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. மத்திய, மாநில அரசு விலைவாசியை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளாமல், தொடர் அலட்சியம் காட்டி வருகின்றன. பொதுமக்களின் அன்றாட உணவு தேவைக்கு பயன்படும் காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட பொருட்களின் விலை, தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. பால் உற்பத்திக்கு இன்றியமையாத மாட்டு தீவனங்களின் விலை உயர்ந்துள்ள தால், உற்பத்தியாளர்கள் பெரும் வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு, 22 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், பல தனியார் நிறுவனங்களும் பாலை கொள்முதல் செய்து வருகின்றன. கடலை புண்ணாக்கு, சோளத்தட்டு, வைக்கோல் உள்ளிட்ட மாட்டு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மாட்டு தீவனங்களை பல தனியார் நிறுவனங்கள் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றன. ஒரு கிலோ மாட்டு தீவனம் 12.50க்கும், 70 கிலோ எடை கொண்ட மூட்டை, 875 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் மாட்டு தீவனம் கிலோவுக்கு, 1.50 ரூபாய் வரை விலை ஏற்றம் கண்டது. மாட்டு தீவனம் கிலோ, 11 ரூபாய்க்கும், மூட்டை 770 ரூபாய்க்கும் விற்று வந்த நிலையில், மூட்டைக்கு, 105 ரூபாய் வரை விலை ஏற்றம் அடைந் துள்ளது. சோளத்தட்டு ஒரு கட்டு, 100 ரூபாய்க்கு விற்று வந்தது. இது, தற்போது 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. வைக்கோல் கட்டு, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலை புண்ணாக்கு கடந்த ஒரு சில நாள்களில் மூட்டைக்கு, இரண்டு ரூபாய் வரை விலை ஏறியுள்ளது.மாட்டு தீவனங் களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் உற்பத்தியாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மாட்டு தீவனங்களுக்கான பசும்புல் வளர்ப்பில் ஈடுபடும் தொழிலாளிகளின் கூலியும் கடுமையாக உயர்ந்துள்ளது. விண்ணை தொட்ட மாட்டு தீவனத்தின் விலையை, அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலர் ராஜேந்திரன் கூறியதாவது: மாட்டு தீவனம் விலை ஏற்றம் கண்டுள்ளதால், மாநில அரசு கலப்பு தீவனங்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மானிய விலையில் வாங்கி, பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேணடும். ஆந்திராவில், தனியார் நிறுவனத்திடம், மாட்டு தீவனத்தை, ஒரு கிலோ, 11 ரூபாய்க்கு வாங்கி, பால் உற்பத்தியாளர்களுக்கு அம்மாநில அரசு வழங்கி வருகிறது. ஆவினம் மூலம் கலப்பு தீவனம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது, நடைமுறை சிக்கலால், மூன்று ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்டது.தமிழ்நாடு கால்நடை துறை, மருத்துவ பல்கலை ஆராய்ச்சி மையம், ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய, மாட்டுக்கு,400 கிராம் மாட்டு தீவனம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு, 20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் நிலையில், எட்டு லட்சம் கிலோ தீவனம் தேவைப்படுகிறது. எனவே, அரசு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மாட்டு தீவனங்களை வாங்கி, பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)