இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பேச்சுவார்த்தை: கிருஷ்ணா ஹிலாரி பேச்சில் முடிவுஇருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பேச்சுவார்த்தை: கிருஷ்ணா ஹிலாரி ... ... ஐ.என்.ஜி. வைஸ்யா பேங்க் நிகர லாபம் ரூ.94 கோடி ஐ.என்.ஜி. வைஸ்யா பேங்க் நிகர லாபம் ரூ.94 கோடி ...
ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2011
16:21

மும்பை: தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டன. இன்று காலை 27 புள்ளிகள் உயர்ந்து 18,534.30 புள்ளிகளாக துவங்கிய மும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றமான போக்கே காணப்பட்டது. ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சி இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. சிறிய மூலதன பங்குகள் 0.7 சதவீதமும், நடுத்தர மூலதன பங்குகள் 0.5 சதவீதமும் உயர்ந்தன. இன்றைய வர்த்தக்தில் நுகர்பொருட்கள் பங்குகள் 2 சதவீதமும், ஐ.டி., பங்குகள் 1 சதவீதமும் உயர்ந்தன. மதியம் வரை எதிர்மறையாக சென்று கொண்டிருந்த ரியாலிட்டி பங்குகள், மாலையில் 0.3 சதவீதம் உயர்ந்தது. எனினும் ஆட்டோ மொபைல் பங்குகள் 0.2 சதவீதம் குறைந்திருந்தன. இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் என்.டி.பி.சி., பங்குகள் 2 சதவீத உயர்வையும், ஸ்டெர்லைட், டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், எல் அண்டு டி, எஸ்.பி.ஐ., மற்றும் பார்தி ஏர்டெல் 1 சதவீத உயர்வையும் கண்டன. டாடா மோட்டார் பங்குகள் 3 சதவீத குறைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 146.83 புள்ளிகள் உயர்ந்து 18,653.87 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 46.50 புள்ளிகள் உயர்ந்து 5613.55 புள்ளிகளாகவும் இருந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)