பதிவு செய்த நாள்
19 ஜூலை2011
16:21
மும்பை: தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டன. இன்று காலை 27 புள்ளிகள் உயர்ந்து 18,534.30 புள்ளிகளாக துவங்கிய மும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றமான போக்கே காணப்பட்டது. ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சி இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. சிறிய மூலதன பங்குகள் 0.7 சதவீதமும், நடுத்தர மூலதன பங்குகள் 0.5 சதவீதமும் உயர்ந்தன. இன்றைய வர்த்தக்தில் நுகர்பொருட்கள் பங்குகள் 2 சதவீதமும், ஐ.டி., பங்குகள் 1 சதவீதமும் உயர்ந்தன. மதியம் வரை எதிர்மறையாக சென்று கொண்டிருந்த ரியாலிட்டி பங்குகள், மாலையில் 0.3 சதவீதம் உயர்ந்தது. எனினும் ஆட்டோ மொபைல் பங்குகள் 0.2 சதவீதம் குறைந்திருந்தன. இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் என்.டி.பி.சி., பங்குகள் 2 சதவீத உயர்வையும், ஸ்டெர்லைட், டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், எல் அண்டு டி, எஸ்.பி.ஐ., மற்றும் பார்தி ஏர்டெல் 1 சதவீத உயர்வையும் கண்டன. டாடா மோட்டார் பங்குகள் 3 சதவீத குறைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 146.83 புள்ளிகள் உயர்ந்து 18,653.87 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 46.50 புள்ளிகள் உயர்ந்து 5613.55 புள்ளிகளாகவும் இருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|