பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
00:03
சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த ஐ.என்.ஜி வைஸ்யா பேங்க், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 94 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதே காலத்தில், இவ்வங்கியின், மொத்த வருவாய் 402.50 கோடி ரூபாயாக உள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 11 சதவீதம் (362.4 கோடி ரூபாய்) அதிகமாகும். அதேசமயம், இவ்வங்கியின் செயல்பாட்டு செலவினம் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால்,செயல்பாட்டு லாபம், 1.2 சதவீதம் குறைந்து, 146.80 கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் நிகர வட்டி வருவாய், 10 சதவீதம் உயர்ந்து 262 கோடி ரூபாயாக உள்ளது. வங்கி வழங்கிய மொத்த கடன்கள், 25.4 சதவீதம் அதிகரித்து, 24 ஆயிரத்து 255 கோடி ரூபாயாகவும், திரட்டப்பட்ட டிபாசிட், 29.4 சதவீதம் உயர்ந்து, 31 ஆயிரத்து 312 கோடி ரூபாயாகவும் உள்ளது. வங்கியின் மூலதன இருப்பு விகிதம் 14.54 சதவீதத்திலிருந்து 15.89 சதவீதமாக அதிகரித்துள்ளது என, இவ்வங்கியின் தலைமை நிதி அதிகாரி ஜெயந்த் மெஹ்ரோத்ரா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|