ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் எப்.பீ.சி.ஈ. திட்டத்திற்கு கிரிசில் குறியீடுஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் எப்.பீ.சி.ஈ. திட்டத்திற்கு கிரிசில் குறியீடு ... டைம்லர் குழுமம் வாகன கடனுக்கு புதிய நிறுவனம் டைம்லர் குழுமம் வாகன கடனுக்கு புதிய நிறுவனம் ...
நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு வெளியிட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2011
00:09

மும்பை: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், பொதுத்துறையைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்கள், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை, நாட்டின் பங்கு வர்த்தகம் சாதகமாக இல்லாததால், பல பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை ஒத்திப் போட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில், இதுவரையில், பொதுத்துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மட்டுமே öŒன்ற @ம மாதம் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, 1,100 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயில் அண்டு நேச்சுரல் காஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி) நிறுவனத்தின், இரண்டாவது பங்கு வெளியீடு, இவ்வாண்டு செப்படம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம், இப்பங்கு வெளியீட்டின் வாயிலாக, 11 ஆயிரத்து 500 கோடி ரூபாயை திரட்டிக் கொள்ளும் என்று தெரிகிறது. மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 5 சதவீத பங்குகளை (42.78 கோடி பங்குகள்) விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. முதலில், இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' யின் புதிய விதிமுறைகளின்படி, இந்நிறுவனத்தில் சுயேட்சை இயக்குனர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததையடுத்து, பங்கு வெளியீடு ஜூலை 5ம் தேதிக்கு ஒத்தி போடப்பட்டது. இச்சூழ்நிலையில், எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு, இந்நிறுவனம், வழங்கும் மானியம் அதிகரித்ததாலும், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலையாலும், இந்நிறுவனம் பங்கு வெளியீட்டை மீண்டும் ஒத்திப்போட்டுள்ளது.இந்நிலையில், பொதுத்துறையைச் சேர்ந்த பீ.எச்.இ.எல்., 'செயில்', எம்.எம்.டி.சி., நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (என்.பீ.சி.சி), ராஷ்டிரிய இஸ்பத் நிகம் (ஆர்.ஐ. என்.எல்), இந்தியன் ஆயில் கார்ப்ப@ரஷன், இந்துஸ்தான் காப்பர் ஆகிய நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டை @மற்கொள்ள திட்டமிட்டுள்ளன.மத்திய அரசின் பங்கு விற்பனை துறை, ரயில்வே மற்றும் ராணுவ துறையைச் சேர்ந்த லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவ்வகையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்.ஏ.எல்) நிறுவனத்தின் பத்து சதவீத பங்குகளை விற்பனை செய்ய கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ துறையைச் சேர்ந்த இந்நிறுவனம், அடுத்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டச் செலவில், நவீனமயமாக்கல் திட்டங்களில் களமிறங்க இருப்பதாக அறிவித்திருந்தது. ஏற்கனவே, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் ஆகிய நிறுவனங்களும் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் என தெரிகிறது.ரயில்வே துறையைச் சேர்ந்த ரைட்ஸ், இர்கான் இண்டர்நேஷனல் (ஐ.ஆர்.சி.ஓ.என்), கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (கான்கார்) ஆகிய நிறுவனங்களும் பங்கு வெளியீட்டைமேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. மேற்கண்ட நிறுவனங்களுள், இர்கான் நிறுவனத்தில், மத்திய அரசு, 99 சதவீத பங்கு மூலதனத்தையும், கான்கார் நிறுவனத்தில் 63.09 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டுள்ளது. மத்திய அரசு, 'செயில்' நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின் மூலம், 6,000 கோடி ரூபாயையும், பெல் நிறுவன பங்கு வெளியீட்டின் மூலம் 4,500 கோடி ரூபாயையும் திரட்ட திட்டமிட்டுள்ளது. இப்பங்கு வெளியீட்டிற்கு பிறகு, பெல் நிறுவனத்தில், மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம், தற்போதைய 67.72 சதவீதம் என்ற அளவிலிருந்து, 62.72 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)