டைம்லர் குழுமம் வாகன கடனுக்கு புதிய நிறுவனம்டைம்லர் குழுமம் வாகன கடனுக்கு புதிய நிறுவனம் ... நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முன்பேர வர்த்தகம் 56 சதவீதம் அதிகரிப்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முன்பேர வர்த்தகம் 56 சதவீதம் ... ...
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியீடு இம்மாத இறுதியில் விதிமுறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2011
00:09

புதுடில்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு வெளியீடு குறித்த விதிமுறைகள், இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என, காப்பீட்டு ஒழுங்குமுறைமேம்பாட்டு ஆணையத்தின் (இரிடா) தலைவர்ஜே.ஹரி நாராயண் தெரிவித்தார்.ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மூலதனச் சந்தையில் களமிறங்கி, பங்கு வெளியீடுகளைமேற்கொள்வதற்கான விதிமுறைகளை உருவாக்கும் பணியில் 'இரிடா' ஈடுபட்டுள்ளது. இது குறித்த வரைவறிக்கை சென்ற மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, காப்பீட்டு சந்தையில் 10 ஆண்டுகள் பூர்த்தி செ#த, அ@த சமயம், வலுவான நிதி ஆதாரத்தை கொண்ட நிறுவனங்கள் மட்டு@ம, பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூல தனச் சந்தையில் களமிறங்க முடியும். பங்கு வெளியீட்டிற்கு முந்தைய 6 காலாண்டுகளில், நிர்ணயிக்கப்பட்ட இடர்பாட்டு வரம்புத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் குறைபாடின்றி பராமரித்து வரவேண்டும். இத்துடன், நிறுவனத்தின் மதிப்பு, அதன் அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை விட, குறைந்தபட்சம் இருமடங்கு அதிகமாக இருக்கவேண்டும். நிறுவனம் தொடர்ந்து மூன்றாண்டுகள் லாபமீட்டியிருக்க வேண்டும். பங்கு வெளியீட்டிற்கு இரிடாவின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், டில்லியில் செ#தியாளர்களிடம்பேசிய ஹரி நாராயண், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு வெளியீடு தொடர்பான விதிமுறைகள் இம்மாதத்திற்குள், இறுதி செ#யப்பட்டு, அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ஆயுள் காப்பீட்டு நிறுவனம், தொடர்ந்து மூன்றாண்டுகள் லாபம் ஈட்டியிருக்கவேண்டும். அதன் பிற@க 'செபி' அமைப்பின் அனுமதிக்கு செல்லவேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)