பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
00:09
புதுடில்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு வெளியீடு குறித்த விதிமுறைகள், இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என, காப்பீட்டு ஒழுங்குமுறைமேம்பாட்டு ஆணையத்தின் (இரிடா) தலைவர்ஜே.ஹரி நாராயண் தெரிவித்தார்.ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மூலதனச் சந்தையில் களமிறங்கி, பங்கு வெளியீடுகளைமேற்கொள்வதற்கான விதிமுறைகளை உருவாக்கும் பணியில் 'இரிடா' ஈடுபட்டுள்ளது. இது குறித்த வரைவறிக்கை சென்ற மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, காப்பீட்டு சந்தையில் 10 ஆண்டுகள் பூர்த்தி செ#த, அ@த சமயம், வலுவான நிதி ஆதாரத்தை கொண்ட நிறுவனங்கள் மட்டு@ம, பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூல தனச் சந்தையில் களமிறங்க முடியும். பங்கு வெளியீட்டிற்கு முந்தைய 6 காலாண்டுகளில், நிர்ணயிக்கப்பட்ட இடர்பாட்டு வரம்புத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் குறைபாடின்றி பராமரித்து வரவேண்டும். இத்துடன், நிறுவனத்தின் மதிப்பு, அதன் அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை விட, குறைந்தபட்சம் இருமடங்கு அதிகமாக இருக்கவேண்டும். நிறுவனம் தொடர்ந்து மூன்றாண்டுகள் லாபமீட்டியிருக்க வேண்டும். பங்கு வெளியீட்டிற்கு இரிடாவின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், டில்லியில் செ#தியாளர்களிடம்பேசிய ஹரி நாராயண், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு வெளியீடு தொடர்பான விதிமுறைகள் இம்மாதத்திற்குள், இறுதி செ#யப்பட்டு, அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ஆயுள் காப்பீட்டு நிறுவனம், தொடர்ந்து மூன்றாண்டுகள் லாபம் ஈட்டியிருக்கவேண்டும். அதன் பிற@க 'செபி' அமைப்பின் அனுமதிக்கு செல்லவேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|