நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முன்பேர வர்த்தகம் 56 சதவீதம் அதிகரிப்புநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முன்பேர வர்த்தகம் 56 சதவீதம் ... ... ஐரோப்பிய பங்குச் சந்தைகளால்'சென்செக்ஸ்' 147 புள்ளிகள் அதிகரிப்பு ஐரோப்பிய பங்குச் சந்தைகளால்'சென்செக்ஸ்' 147 புள்ளிகள் அதிகரிப்பு ...
ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் துறைமுகங்கள் கையாண்ட சரக்குகள் 14.66 கோடி டன்னாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2011
00:11

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஜூன் 31ம் தேதி வரையிலான, மூன்று மாத காலத்தில், உள்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகள், 14.66 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 5.22 சதவீதம் (13.93 கோடி டன்) அதிகமாகும்.உலகின் பல முன்னணி நாடுகளின் பொருளாதார சுணக்க நிலையால், இந்திய துறைமுகங்களின் சரக்கு போக்குவரத்தில், மந்தநிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இக்காலாண்டில், கையாளப்பட்ட சரக்குகளின் அளவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இறக்குமதி அதிகரித்துள்ளது. அதாவது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிலக்கரி இறக்குமதி, கடந்த ஆண்டின் முதல் காலாண்டை விட, 25 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் மசகு எண்ணெய் வகைகள் இறக்குமதியும், 10 சதவீதம் உயர்ந்துள்ளது.அதேசமயம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இரும்புத் தாது ஏற்றுமதி மற்றும் ரசாயன உரங்கள் இறக்குமதி குறைந்ததையடுத்து, ஒரு சில முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, முக்கிய துறைமுகங்களில் கையாளப்பட்ட உரங்கள், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 42 சதவீதம் சரிவடைந்து அதாவது, 31.57 லட்சம் டன்னிலிருந்து, 18.15 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று கையாளப்பட்ட இரும்புத் தாதுவின் அளவும், 2.28 கோடி டன்னிலிருந்து, 1.94 கோடி டன்னாக குறைந்துள்ளது. சென்னை, கொச்சி, மர்மகோவா மற்றும் மும்பை ஆகிய நான்கு பெரிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, சென்னை துறைமுகத்தில் இரும்புத் தாது கையாளும் அளவு குறைந்ததையடுத்து, இத்துறைமுகத்தின் ஒட்டு மொத்த சரக்குகள் கையாண்ட அளவு 2.98 சதவீதம் குறைந்து, 1.56 கோடி டன்னிலிருந்து, 1.51 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், சென்னை துறைமுகம் 15.66 லட்சம் டன் இரும்புத் தாதுவை கையாண்டிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில், இத்துறைமுகம் கையாண்ட இரும்புத் தாதுவின் அளவு, 29 ஆயிரம் டன்னாக மிகவும் குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து, மிக அதிகளவில் இரும்புத் தாது, சென்னை துறைமுகத்தின் வாயிலாக, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இரும்புத் தாது வெட்டியெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இத்துறைமுகத்தின் செயல்பாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தடை தொடர்ந்து நீடிப்பதால், இனி வரும் மாதங்களிலும், இரும்புத் தாது ஏற்றுமதியில், பாதிப்பு இருக் குமென துறைமுக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.இதே காலத்தில், எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 37 சதவீதம் அதிகரித்து, 22.62 லட்சம் டன்னிலிருந்து, 30.99 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவும், 18.02 சதவீதம் அதிகரித்து, 59.37 லட்சம் டன்னிலிருந்து, 70.07 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 18.57 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.57 கோடி டன்னிலிருந்து, 1.86 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயம், மும்பை துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 4.51 சதவீதம் குறைந்து, 1.42 கோடி டன்னிலிருந்து, 1.36 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.சர்வதேச அளவில் சரக்குகளை கையாள்வதற்கான Œரக்குக் கட்டணமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒரு சில மாதங்களுக்கு முன்பாக, ஒரு டன் சரக்கை கையாள்வதற்கான கட்டணம் 415-500 டாலர் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது, 550-620 டாலராக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)