பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
00:11
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்க்கிழமையன்று சிறப்பாக இருந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் சூடுபிடித்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இந்நிலையில், பல முன்னணி நிறுவனங்களின் காலாண்டு செயல்பாடு, சந்தை மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது என்ற நிலைப்பாட்டாலும் பங்கு வர்த்தகம் சூடுபிடித்துக் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மின்சாரம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 146.83 புள்ளிகள் அதிகரித்து, 18,653.87 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,690.42 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,481.83 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 24 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 46.50 புள்ளிகள் உயர்ந்து, 5,613.55 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 5,627.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,557.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|