பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
15:47
புதுடில்லி: வரும் அக்டோபர் மாத இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியை தொடுகிறது. உலகில் ஒவ்வொரு விநாடியும் 5 குழந்தைகள் பிறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 வருடங்களுக்கு முன் உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 1960ம் ஆண்டு 300 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை விறுவிறுவென உயர்ந்து 1999ம் ஆண்டு 6 பில்லியன் அளவை தொட்டது. உலகின் மிக ஏழ்மையான நாடுகளே மக்கள் தொகை பெருக்கத்தில் பெரும் பங்கு வகிப்பதாகவும், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்நாடுகளின் மக்கள் தொகை இருமடங்காக வாய்ப்புள்ளதாகவும், ஐ.நா., ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. வரும் 2025ம் ஆண்டு, உலக மக்கள் தொகை 800 கோடியைத் தொடும் என்று கணக்கிட்டுள்ள அந்த அறிக்கை, இது மிகவும் அபாயகரமானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|