பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
16:43
மும்பை: இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151 புள்ளிகளை இழந்து, 18,502.38 புள்ளியாக முடிந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 46.50 புள்ளிகள் குறைந்து 5567.05 புள்ளிகளாக முடிந்தது. இன்று காலை 112 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை, பின்னர் சரிவை நோக்கி திரும்பியது. நடுத்தர முதலீட்டு பங்குகள், 0.4 சதவீதமும், சிறிய முதலீட்டு பங்குகள் 0.1 சதவீதமும் குறைந்தன. மற்றொருபுறம், ஐரோப்பிய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே துவங்கின. மும்பை பங்குச்சந்தையில் எப்.எம்.சி.ஜி., பங்குகள் 0.6 சதவீதமும், ரியாலிட்டி பங்குகள் 0.1 சதவீதமும் உயர்ந்திருந்தன. இதேபோல், ஹெல்த் கேர், மின்சாரம், ஐ.டி., பங்குகள் 1 சதவீதம் குறைந்தன. ரியாலிட்டி மேஜரான டி.எல்.எப்., பங்குகள் சுமார் 2 சதவீதம் வரை உயர்ந்தன. இதே போல், எப்.எம்.சி.ஜி., ஜெயண்டான ஐ.டி.சி., 1 சதவீதம் உயர்ந்தன. இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ நிறுவன பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்தன. இதே போல், ஹிண்டால்கோ, ஜெய்ப்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஹீரா ஹோண்டா, என்.டி.பி.சி., மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் சிப்லா நிறுவன பங்குகளும் 1 சதவீதம் குறைந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|